என் மலர்
நீங்கள் தேடியது "Thaadi Balaji"
- விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
- நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.
கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. பிரசாரகூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய், வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே, விஜயை சந்தித்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
* விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
* கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தனித்துவிடப்பட்டுள்ளார்.
* நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.
* கூட்டணி தொடர்பாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும் என்றார்.
- முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு
- நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் பேச்சால் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
எல்லோருக்கும் வணக்கம். நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நமது முதல்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டதும் மனசே சரியில்லை. கூடிய விரைவில் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவார். என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நமது முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும்.
என்னதான் நாம் மருத்துவமனையில் இருந்தாலும், நமக்கு ட்ரீப்ஸ் ஏறினாலும், மருத்துவர் நம்மை பார்த்துக்கொண்டாலும், மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அதைவிட பூரணமாக குணம் அடைந்து வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி இருக்கு. அது என்ன என்று கேட்டால்...
முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்போது , காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும்போது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிடக்கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மனஉளைச்சல் இருக்கு பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் செய்கின்ற செயல்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் இதையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ... தலைவரை போய் பாதிக்கும். முதலமைச்சரை பாதிக்கும். அதுக்காகத்தான் அவர் அந்த வார்த்தை சொல்கிறார். தயவு செய்து இனிமேல் நீங்கள் பேசும் பேச்சிலோ, செயலிலோ கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால்? நம்ம முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு. நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.
த.வெ.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய சகோதரி வைஷ்ணவி ஒரு புகார் கொடுத்துள்ளார். தலைவர் அறிக்கை விடுகிறார் என்பதை தாண்டி, ஒரு கட்சியில இருக்கோம், ஒரு புது கட்சி தொடங்கியிருக்கிறது, எந்தவித பாதிப்பும், அவமானமும் நம்ம கட்சிக்கும், தலைமைக்கும், தலைவருக்கும் வரக்கூடாது என்பது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ரொம்ப முக்கியது. அப்படிப்பட்டவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி முடிக்க பார்க்க வேண்டும் என்றார்.
- கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
- யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர் நகர் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள 11 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
'யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் 24 மணி நேரமும் காவல் நிலைய கதவு திறந்தே இருக்கும், எங்களை வந்து அணுகுங்கள். அரசின் சார்பில் மாணவர்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் இலவச ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகிறது. கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது' என கூறிய உதவி ஆய்வாளர் பரமசிவம், பெற்றோரிடம் மன்றாடி 11 மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப செய்துள்ளார்,
மாணவர்களின் பெற்றோரிடம் உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பாராட்டுகளை அள்ளி வருகிறது. இதுதொடர்பான செய்தியை ஷேர் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி பாராட்டுகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தாடி பாலாஜி.
- இவர் சின்னத்திரைப் போல வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை நடிகர் தாடி பாலாஜி அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

தாடி பாலாஜி
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறியதாவது, லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்துகிறேன் என்று கூறினேன். அதன்படி நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டேன். அவரது கல்விக்கான சிறிய உதவிகளை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளேன். தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை கொண்டு வருகிறார்கள்.
இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நான் அரசியலுக்கு வருவேன், வந்தால் நல்ல விஷயங்கள் பல செய்வேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் வேலை செய்ய தயாராகவுள்ளேன் என்று கூறினார்.







