search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு-அரசியல் கட்சியினர் மாலை
    X

    மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு-அரசியல் கட்சியினர் மாலை

    • குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள்
    • பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று நாகர்கோ வில் வேப்ப மூட்டில் உள்ள மார்சல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வா கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். நிகழ்ச்சி யில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், தாசில்தார் ராஜா சிங், ஒன்றிய செயலாளர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்போலோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள நேசமணி சிலைக்கு அரசி யல் கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்துரு, ராணி துணை செயலாளர் சுகுமா ரன், இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், இளைஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வெங்கடேஷ் ஜெயகோபால், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்சயாகண்ணன், பகுதி செயலாளர் முருகேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜா பிள்ளை, வக்கீல் சுந்தரம் மற்றும் ரபீக் உள்ளிட்ட நிர்வாகி கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநக ராட்சி மண்டல தலைவர் செல்வகுமார்,இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×