என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவந்தி ஆதித்தனார்"

    • பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர், அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டு அவர்களால் அன்போடு சின்னையா என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டம் மற்றும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்டுவதற்கு உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த நான், முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மணிமண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு காலத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. அரசால் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை பொதுமக்களும் கலந்து கொள்ளும் விதமாக மிகப்பெரிய விழாவாக நடத்தி எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    பல்வேறு மன்னர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், பத்திரிகை உலகை சேர்ந்தவருக்கு சிலை அமைத்த முதல் பெருமை அ.தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது. இதே போல் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் விழாவையும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்தார்.

    சி.பா. ஆதித்தனார் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான் என்ற பெருமை எங்களுக்கு எப்போதும் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதாகுமரன், சம்யுக்தா ஆதித்தன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் மகாலிங்கம்,

    தி.மு.க. சார்பில் வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், வர்த்தகர் அணி நிர்வாகிகள் தமிழ்மணி, சுரேஷ், ராஜமாணிக்கம், கனிமொழி, அல்லிராஜ், சரவணன் சீனிவாசன், வெங்கடேசன், ரங்கநாதன், பாபு, ஆறுமுகம், தி.நகர் சீனிவாசன், கோபி, ரஞ்சித், ஆனந்தன், பாலாஜி.

    இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன்,

    காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், சைதை வில்லியம்ஸ், புதூர் பிரகாஷ், நந்தனம் ஆதியார், அருள் பெத்தையா, ஜி.கே.தாஸ், சிவாஜிநாதன், சேவியர்.

    த.மா.கா. பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்.பி.நாதன், ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர் சென்னை நந்து, எஸ்.ஆர்.கேஸ்டில் ரவி,

    சமத்துவ மக்கள் கழக தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், துணை பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, வண்ணாரப்பேட்டை நாடார் சங்க செயலாளர் ராஜேஷ், கடையல் நாடார் சங்கத் தலைவர் தாஸ், ஆலடிப்பட்டி நாடார் இளைஞர் சங்க தலைவர் மாசிலாமணி, அத்திகுளம் நாடார் சங்க பொருளாளர் சங்கரபாண்டியன், சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு உறுப்பினர் சாபுதீன்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் சந்திரமோகன், கரு.சின்னதுரை, மனோக ரன், கிப்சன், முருகேசன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நிர்வாகிகள் பாஸ் கர், பத்மநாபன், மருதவேல், மேகவேல்.

    தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட் டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார்.

    சேலம் நாடார் சங்க துணைத் தலைவர் மாடசாமி, திருச்சி அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமுல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் கணேசன் நாடார், துணை தலைவர் கதிரேச பெருமாள், பொருளாளர் லட்சுமணன், கமிட்டி உறுப்பினர் ஸ்டீபன்,

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் சுந்தர், செயலாளர் திருபுகழ், பொருளாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை, மாணிக்கவேல், அரிதாஸ், தாமஸ், பச்சையப்பன், வில்சன், தேவசகாயம், மாசானமுத்து, ராமசாமி, சுரேஷ் பொன்ராஜ், குணசீலன், தங்கராஜ், திருமலை, ராமகிருஷ்ணன், முருகேசன்.

    நாடார் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் படப்பை சேவியர், சைமன் பொன்ராஜ், முருகேசன், ஆலயா ரமேஷ் கண்ணன், ஆல்பர்ட் தேவதாஸ்,

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர்முருகன், பொருளாளர் நசீர் அகமது, துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, ஆறுமுக நயினார், அயன்புரம் கிளை மன்ற நிர்வாகிகள் பிரபு சவுந்தர் முருகன், சந்திரசேகர், சச்சிதானந்தம், துரைராஜ், பால்ராஜ், செங்குட்டுவன், ஜஸ்டின், பாலமுருகன், ராமலிங்கம், மனோகரன், நந்தகுமார், புகழ், அருண் பாண்டியன், சதீஷ், சிவபிரகாசம், பார்வதி செல்வன்,

    மணலி புதுநகர் அய்யா வைகுண்டபதி தலைவரும், நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான துரை பழம், நிர்வாகிகள் ராமையா, வன்னியராஜன், பாண்டியன், மீஞ்சூர் கிளை நிர்வாகி வி.எஸ்.லிங்கம், திருத்தணி நகர நற்பணி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஆர்.கே.நகர் பகுதி மன்ற தலைவர் வேல்ராஜா.

    தென்காசி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற லோட்டஸ் முருகன், திருச்சி அனியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் ராஜா, செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெகன், லயன்முருகன், செல்வம், தர்மராஜ், கார்மேகம், ஜான்வெஸ்லி, பாலன், தேவராஜ், வேல்குமார், டேவிட், அந்தோணி, முகைதீன், சத்தியரீகன், வில்வநாதன், தர்மலிங்கம், செல்வம், மீரான், தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா.

    வடசென்னை வியாபாரி சங்கத் தலைவர் ராபர்ட், செயலாளர் சேவியர், துணை தலைவர் எட்வர்ட் துணை செயலாளர் செந்தில்.

    பழைய வண்ணாரப் பேட்டை முருகன் டாக்கீஸ் பாலசுப்பிரமணியன்.

    • இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    திருச்செந்தூர்:

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர். விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியவர். ஆன்மீக பணிகளை மேற்கொண்டவர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர், அவரது புகழ் என்றென்றும் வாழ்க! என்றென்றும் வாழ்க!!

    இவர் அவர் கூறினார்.

    • போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
    • பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 12-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) கடை பிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 12-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன், ஜெயந்தி அம்மாள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மனிதநேய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, விஜய் வசந்த் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம்,

    தி.மு.க. இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், மயிலை பாலு, தாமோதரன், மகேந்திரன், விஜயராஜ், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள் காந்த், மகளிர் அணி அமைப்பாளர் ஷகிலா

    அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன்,

    காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கே.தாஸ், தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் சிவாஜிநாதன், கொட்டிவாக்கம் முருகன், வினோத், எம்.எஸ்.காமராஜ், தணிகாசலம்,

    பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நிர்வாகிகள் கிரி, காளிதாஸ், சி.ராஜா, மாரியப்பன், வன்னியராஜா, ராமையா,

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜுன் ரவி, அதிபன், தி.நகர் அரி,

    த.மா.கா. வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, பொதுச்செயலாளர் சண்முகவேல், சிவபால்

    பா.ம.க. பொருளாளர் திலகபாமா, நிர்வாகிகள், முத்துக்குமார், சிவராமன், சிவகுமார், ஜெயராமன், ஜனார்த்தனன்,

    தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் தி.நகர் அப்புனு, தாமு, சபரிநாதன், நிர்வாகிகள் காந்தி, தர்மா, தேவா, அனிதா, மரகதவல்லி, முத்து, லட்சுமிதேவி,

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் வக்கீல் கண்ணன், ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர் ராஜேஷ், வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மாசிலாமணி, ராயபுரம் பகுதி பொருளாளர் சங்கர பாண்டியன், 38-வது வட்டக் கழக செயலாளர் சண்முகசுந்தரம்,

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலை வர் முத்துராமன், சிங்கப் பெருமாள், செயலாளர் விஸ்வநாதன்,

    இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொருளாளர் எட்வர்ட் ராஜா, துணை செயலாளர்கள் திரவியம், ரவிராஜன், லட்சு

    மணன், திருச்சி அவனியாப்பூர் நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் கமல்நாதன், துணைத்தலைவர் ராஜேந்திரன், நெல்லை வாழ் முக்கூடல் நாடார் சங்கத் தலைவர் ஆர்.சி.சிதம்பரம், மாடம்பாக்கம் நாடார் சங்கத் தலைவர் பொன்னம்பலம், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் அழகுராஜ்,

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் ராம்ராஜ், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜிராஜன், மாநில செயலாளர் சைமன் பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நிர்வாகிகள் வீரகுமார், பாஸ்கர், முருகவேல், நாகராஜ், கலையரசு,

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க சென்னை கிளை தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் கணேசன், நிர்வாகிகள் வேலுமணி, அன்புசெழியன், ஏ.பி.துரை, லட்சுமணன், சென்னை வாழ் இனாம்கரிசல் குளம் நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார்,

    திருவள்ளூர் மாவட்ட நாடார் பேரவை தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ்,

    நாடார் பேரவை வட சென்னை மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், மாவட்ட பொருளாளர் கே.சுடலைமணி, மாவட்டத் துணைத் தலைவர் வெள்ளைச் சாமி, துணைச் செயலாளர் ராஜ்குமார், ஆர்.கே.நகர் பகுதி செயலா ளர் எஸ்.பாக்யராஜ், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தாஸ், துணைச் செயலாளர் சதீஷ், மணலி டேணிஷ்குமார்,

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க நிர்வாக செயலாளர் பி.சந்திரசேகர், நிர்வாகிகள் சதானந்தம், கல்வி கமிட்டி உறுப்பினர்கள் வெள்ளத் துரை, எட்டுராஜ், சண்முக வேல்,

    தமிழ்நாடு வணிகர் பேரவை பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன், வெள்ளையன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சண்முகம், செல்வராஜ், மத்திய சென்னை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா மற்றும் நிர்வாகிகள் சதுக்கத் துல்லா, ஷேக் முகைதீன், சத்தியசீலன், பஷீர் அகமது,

    தமிழ்நாடு டாக்டர் சி.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொருளாளர் நசீர் அகமது, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. ஆறுமுக நயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, மும்பை நற்பணி மன்ற தலைவர் ரசல் நாடார், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் பொன்னு, நிர்வாகிகள் சிவன் பாண்டியன், பெனியேல், செல்வன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற துணைச் செயலாளர் செல்லத்துரை,

    சேலம் மாவட்ட நற்பணி மன்ற தலைவர் வேலாயுத ரவீந்திரன், மத்திய சென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் எழுத்தாளர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், வடசென்னை கிழக்கு மாவட்ட நற்பணி மன்ற துணைத் தலைவர் எட்வர்ட்ராஜா,

    திருச்சி அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம் மற்றும் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், அயன்புரம் கிளை நிர்வாகிகள் பிரபு, சவுந்தர் முருகன், சச்சிதானந்தம், பார்வதி செல்வன், ஜஸ்டின், பாலகிருஷ்ணன், அருள்குமார், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற தலைவர் துரைபழம், துணைத் தலைவர் ராமையா, துணை செயலாளர் வன்னியராஜன், கடலூர் மாவட்ட நற்பணி மன்ற கிளை தலைவர் அமுதன் வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது நினைவு நாள் இன்று.
    • மக்களுக்கும், சமூகத்திற்கும் பா.சிவந்தி ஆதித்தனார் செய்த கொடைகளையும், சேவைகளையும் அவரது நினைவு நாளில் போற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது நினைவு நாள் இன்று. உழைப்பின் உருவம் அவர். தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் மகன் என்றாலும், தமது இதழியல் பயணத்தை அச்சுக்கோர்ப்பதில் இருந்து தொடங்கி அடுத்தடுத்தக் கட்டங்களை எட்டியவர். அனைத்து நிலைகளிலும் பயணித்தவர் என்பதால் தான் பணியாளர்களின் உழைப்பை உணர்ந்தும், மதித்தும் ஏற்பளித்தார்.

    கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும் கணக்கின்றி அள்ளி அள்ளிக்கொடுத்தவர். அவரது கொடைகள் தலைமுறைகளையும், நூற்றாண்டுகளையும் கடந்து நினைவு கூரப்படும். அவர் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும், அவருடன் பழகிய நினைவுகள் மறக்கவில்லை. மக்களுக்கும், சமூகத்திற்கும் அவர் செய்த கொடைகளையும், சேவைகளையும் அவரது நினைவு நாளில் நாம் போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் இதழியல் வரலாற்றில் தந்தை சி.பா. ஆதித்தனாரைப் போலவே சிவந்தி ஆதித்தனாரும் தவிர்க்க முடியாதவர்.
    • பா. சிவந்தி ஆதித்தனார் செய்த மக்கள் பணிகளால் அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்தாவது நினைவு நாளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ் இதழியல் வரலாற்றில் தந்தை சி.பா. ஆதித்தனாரைப் போலவே சிவந்தி ஆதித்தனாரும் தவிர்க்க முடியாதவர். இதழியல் துறை அவர் தொட்டதெல்லாம் துலங்கின. அவரது அனைத்து புதிய முயற்சிகளும் வென்றன. அதற்குக் காரணம் அவர் மக்கள் மனங்களை நன்கு அறிந்திருந்தது தான்.

    கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் அவர் செய்த சாதனைகளும், அவர் அளித்த கொடைகளும் அவரது பெருமையை என்றென்றும் பேசும். பா. சிவந்தி ஆதித்தனார் செய்த மக்கள் பணிகளால் அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பெருமைகளை இந்த நாளில் நாம் போற்றுவோம். அவரது புகழ் மேலும் பரவட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளிய தமிழில் தினத்தந்தி நாளிதழை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வித்திட்டவர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து இந்திய விளையாட்டு துறைக்கு சிறப்பு சேர்த்ததுடன், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை தொடங்கி கல்வி துறையிலும் சிறந்து விளங்கியவர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எளிய தமிழில் தினத்தந்தி நாளிதழை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வித்திட்ட பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று.

    சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து இந்திய விளையாட்டு துறைக்கு சிறப்பு சேர்த்ததுடன், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை தொடங்கி கல்வி துறையிலும் சிறந்து விளங்கியவர். அன்னாரின் நினைவு நாளில் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 10-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (புதன்கிழமை) கடை பிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, தந்தி டி.வி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், சிம்லா முத்துசோழன், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த்,

    அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர்மன்னன், இ.சி.சேகர்

    தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் எம்.எஸ்.காமராஜ், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வர்த்தக பிரிவு தலைவர் தணிகை வேல், பகுதி செயலாளர் பிரபு, சிவாஜிநாதன், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மாம்பலம் ராஜேந்திரன்

    பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நாச்சிக்குளம் சரவணன், வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.ராமையா

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கொட்டிவாக்கம் முருகன், நீலாங்கரை ஆர்.டி.பாஸ்கர்,

    தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், மாறன், ஜமுனா, கேசவன், ஏழுமலை, குமார், ஜானகி ராமன், மகஸ்,

    த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச் செயலாளர் எம்.பி.நாதன், ஆர்.எஸ்.முத்து, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன்,

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், மாவட்ட செயலாளர் மு.ஆனந்த், மணிகண்டன், அய்யனார்,

    புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், ராஜாராம், ஆர்.முரளி, பழனி, பிரகாஷ், செல்வம், லோகநாதன், ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ஜானகி ராமன், ரமேஷ், மணி, துரைராஜ், ஜெகன், சேகர், ரவி, சங்கர், நடராஜன், தீர்த்தகிரி, சந்தோஷ்குமார், வினோத்குமார்.

    புரட்சி பாரதம் மாநில தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் ஆலை சிவலிங்கம்,

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், துணை தலைவர் பரமன்குறிச்சி வி.பி.ஜெயக்குமார், சென்னை மாநகர தலைவர் இளங்கோவன்.

    • அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தண்டுபத்து ஜெயராமன் சார்பில் அவரது மகன்கள் ரகுராம், சிவராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வக்கீல் சந்திரசேகர், ஆயுட்கால உறுப்பினர் அம்பி கண்ணன், உறுப்பினர்கள் அஜித்குமார், செல்வி, காயாமொழி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முகதூம் முகைதீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில், செயலாளர்கள் நாராயணராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆதித்தனார் கலைக்கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமி தாஸ், ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்சிலின் ஜிஜி, பத்ம ஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ஜெயக்குமார் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், ஹெட்கேவார் ஆதித்தன், பகவதி ஆதித்தன், தேசிகா அறக்கட்டளை நிறுவனர் குமரகுருப ஆதித்தன், சண்முகானந்தன் ஆதித்தன் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, துணை செயலாளர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேல்சாமி, எழில் வண்ணன், ஒன்றிய தலைவர் ரமேஷ் பாலன், இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
    • ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் போற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.

    விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்ததிலும், ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக அவர் போற்றப்பட்டார்.

    அவரது பெருமைகளை இன்றைய நாளில் நாம் நினைவு கூருவோம். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
    • தினத்தந்தி பத்திரிகையில் செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    சங்கரன்கோவில்:

    ம.தி.மு.க. சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் புரட்சி செய்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மகன் டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை பங்களாவாசி முதல் ஏழை, எளிய மக்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

    தினத்தந்தி பத்திரிகையில் தமிழக செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், பொருளாதார செய்திகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    தந்தி டி.வி.யை உருவாக்கிய சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை சங்கரன்கோவிலில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ரத்ன வேல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • 88-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    • காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் சிவபிரபு, டைசன், சீனிவாசன் ஆதிலிங்கபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் அகஸ்தீசன், சரவணன் பீனிக்ஸ் கண்ணன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். இதில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், சந்திரசேகரன், ஆர்.எம்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், சேகர், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, ஜெயகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் தங்கவேல், மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனீஸ், துணைத் தலைவர் யூஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் தியாக ராஜன், பிரதீஸ், மார்த்தாண்டன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×