search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    X

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    • 88-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    • காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் சிவபிரபு, டைசன், சீனிவாசன் ஆதிலிங்கபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் அகஸ்தீசன், சரவணன் பீனிக்ஸ் கண்ணன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். இதில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், சந்திரசேகரன், ஆர்.எம்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், சேகர், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, ஜெயகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் தங்கவேல், மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனீஸ், துணைத் தலைவர் யூஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் தியாக ராஜன், பிரதீஸ், மார்த்தாண்டன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×