search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கட்சி"

    • காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலை இருந்தது.

    இந்நிலையில், இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.

    அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர்.

    தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.

    இதற்கிடையில், காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    மத்திய அரசை கண்டித்து கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் கனரா வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள் குமரேசன், மரிய அருள்தாஸ், ராஜகிளன், ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்கு மார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு உரிய முக்கி யத்துவம் வழங்குவதில்லை. 2021-22 இல் ரூ.98,468 கோடி ஒதுக்கிய நிலையில், 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    ஆனால் எதிர்பார்க்கப் பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூ.73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதம் குறை வாகவும், 2022-23 நிதி யாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் ரூ.6147 கோடி தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

    இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக வெறும் 17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மோடி அரசு அநியாயமான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டு மென்றால் ரூ2.72 லட்சம் கோடி தேவை. ஆனால் தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

    கொரோனா காலத்தில் கிராமப்புற பொருளா தாரத்தை இத்திட்டம் தான் காப்பாற்றியது. கோடிக்க ணக்கான மக்களை பட்டினி கொடுமையிலிருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கி யது.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், பால்மணி, மாநில பொதுசெயலாளர் ஆஸ்கர்பிரடி, நிர்வாகிகள் ஆசீர் பிரைட் சிங், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், , கிள்ளியூர் வட்டார பொதுசெயலாளர் எட்வின்ஜோஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், 100 நாள் வேலை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் :

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால்நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ.சார்பாக ஆற்றூர் சந்திப்பில் அவரது உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங் குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ஜான் இக்னேசியஸ், ஆற்றூர் குமார், மாவட்ட செயலாளர் பெனட், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் காமராஜர் சிலை அருகே தேசிய காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடை பயணம் நகர தலைவர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவணி அண்ணாமலை பங்கேற்றார்.

    மேலும் நடைபயணம் காமராஜர் சிலை தொடங்கி பழைய பஸ் நிலையம் மார்க்கெட் வீதி மண்டி தெரு வழியாக காந்தி சிலையில் முடிந்தன.

    பின்னர் நடை பயன பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயன சாதனைகள் எடுத்துரைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர நிர்வாகிகள் உதயகுமார் பிள்ளையார் குருமூர்த்தி, சம்பந்தம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை கிராம மக்கள் தங்களது பகுதியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல பாலம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் இந்த கிராம மக்கள் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் இந்த பகுதியில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட விஜய்வசந்த் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தனர்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.48½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், இரவிபுத்தன்துறை பங்கு தந்தை ரதீஷ், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணிபிச்சை, ராஜூ மற்றும் மகேஷ், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி நடந்தது
    • போராட்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட் பட்ட 4-வது வார்டு இடைவளாகம் காலனி சாலை, இடவிளாகம்-சி.எஸ்.ஐ. சபை சாலை, மிட்டல், வள்ளி கோடு, அம்பலத்துவிளை ஆகிய சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.பிரிவு மாநில துணை தலைவர் ஜோஸ்லால் தலைமையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • ராகுல் காந்தி எம்பி பதவியை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஊரணிபுரம் கடைவீதியில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம்ஊ ரணிபுரத்தில் ராகுல் காந்தி எம்பி பதவியை நீக்கியது செல்லும் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவோணம் அருகே ஊரணிபுரம் கடைவீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி, தலைமை தாங்கினார், காங்கிரஸ் திருவோணம் வட்டார தலைவர் முத்து,

    முன்னிலை வகித்தார், மேலும் முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், முருகையன், நகரத் தலைவர் அருணா ராஜேந்திரன் , ரத்தினவேல், முத்து பழனிவேல், சேசு, பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், வி எஸ், வீரப்பன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் தீர்ப்பை திரும்ப பெற கோரி கோஷமிட்ட வாரு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • ராகுல் காந்தி மக்களிடம் குறைகளை கேட்டு மக்களோடு மக்களாக அமைதி திரும்ப போராடிக்கொண்டிருக்கிறார்.

    நாகர்கோவில் :

    களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு மணிப்பூ ரில் நடைபெறும் கலவ ரத்தை கட்டுப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறி விட்டதாகவும், அதனை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக கேட்டும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் முன் னிலை வகித்தார். போராட் டத்தில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசி யதாவது:-

    மத்திய அரசின் இனவெறி செயல்பாடால் மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசும் மத்திய அரசு அமைதி திரும்ப எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.

    இந்திய மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்து அதிகபட்ச தண்டனையாக அவரது எம்.பி. பதவியை பறித்துவிட்டனர். அவர் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எரிகின்ற மணிப்பூர் மாநிலத்தில் ராகுல் காந்தி மக்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து, மக்களோடு மக்களாக அமைதி திரும்ப போராடிக்கொண்டிருக்கிறார்.

    ஆனால் மத்தியில் ஆளுகின்ற பிரதமரோ, அமைச்சர்களோ அங்கு ஏற்படும் உயிர் சேதங்களை பார்வையிடவோ நடவ டிக்கை எடுக்கவோ முயற் சிக்கவில்லை. நாட்டின் மீது ஒவ்வொருவரும் பற்று கொண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட துணை தலைவர் பால்மணி, வன்னியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் வன்னியூர் பாபு, மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி ஷர்மிளா ஏஞ்சல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது

    • வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
    • 2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.

    வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.

    முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

    விருதுநகர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகாசியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

    வழக்கறிஞர்கள் முருகானந்தம், குப்பை யாண்டி, ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    தலைமைப்பண்பு குறித்து பேராசிரியர் சிவனேசன் பயிற்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் முத்துமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் கணேசன், குருசாமி, ஷேக், பச்சையாத்தான், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி. அணி சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புஷ்பராஜ் திலகம், மகளிர் அணி மாவட்ட தலைவி சேர்மக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் முருகையா, சுந்தர்ராஜன், கோடீஸ்வரன், பரமசிவன், தாவீது, வெங்கடேசன், வேலுச்சாமி, முனியசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சக்தி முப்புடாதி, வேலம்மாள், சங்கர் ரதி, சமுத்திரவள்ளி, பொன்னுத்தாய், செல்லம்மாள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கே.சரவணன் தலைமை தாங்கினார்.

    இதில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், சூரத் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்தும், பா.ஜ.க., அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி, வடக்கு மாவட்ட துணை தலைவர் செல்வம் ராமசாமி உள்பட கட்சியின் மாவட்ட, நகர, வட்டார, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×