search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    பொதுமக்களுக்கு காங்கிரசார் இனிப்புகள் வழங்கிய காட்சி.

    சிவகிரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • சிவகிரி நகர காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சிவகிரி:

    காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. அறிவுரையின்படி, மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து 7-ம் திருநாள் மண்டபம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஓ.பி.சி. தலைவர் திருஞானம், நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், நகர இலக்கிய அணித்தலைவர் அசோக், நகர காங்கிரஸ் துணைத்தலைவர்கள் எம்.குமார், நாட்டாமை மாணிக்கம், எஸ்.வேலுச்சாமி, செயலாளர்கள் வெள்ளைச்சாமி, குட்டி டெய்லர், ஆறுமுகம், கணேசன், மாடசாமி, வெள்ளத்துரை, மணி ஆசாரி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×