search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 LAKHS"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார்.

    இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் காந்தி ராணா கூறியதாவது:-

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக இருந்தது. 1480 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகள், வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் படி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லை வலுக்கட்டமாக வீசியதை கண்டறிந்துள்ளோம்.

    முதல் மந்திரி மீது கல் வீசியவர்களை போலீசார் கைது செய்ய உதவும் வகையில் தகவல் அளிப்ப வர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும்

    அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.
    • என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் ஆதி மூலம் லக்ஷ்மணா. விவசாயி.

    இவர் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்வதற்காக சுமார் ரூ. 2 லட்சம் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் பத்திரப்படுத்தி சேமித்து வைத்திருந்தார்.

    இந்நிலையில், நேற்று மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் மொத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பார்ப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்து பார்த்தார்.

    அப்போது இரும்பு பெட்டியில் இருந்த பணம் கரையான் அரிக்கப்பட்டு துண்டு துண்டாக இருந்தது. இதை கண்ட ஆதி மூலம் லக்ஷ்மணா அதிர்ச்சடைந்தார்.

    பெட்டியை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்த போது உள்ளே வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தியிருந்தது தெரிய வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்துள்ள ஆதிமூலம் லக்ஷ்மணா, அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.

    என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டி ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சி மேற்கொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய திருப்பூர் மாவட்டம் அவிநாசி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி( 51),கோவை சரவணம்பட்டி சக்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (52) ஆகியோர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறினார்.

    பின்னர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் வந்து அவருக்கு தேவையான ரூ.2 கோடி கடன் தொகையை குறைந்த வட்டியில் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக முன்பணம் ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.

    அதன் பிறகு அவர்கள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள வெள்ளி ஷோரும்களூக்கு வெள்ளி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர்.
    • புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 615 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ஆகிய வற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது49). இவர் தனது மாமனார் வேணுகோபாலுடன் சேர்ந்து வெள்ளி தொழிலில் ஈடுபட்டார்.

    தொழில் தொடங்கியபோது வேணுகோபால் ரூ.19 ஆயிரத்து 712 மற்றும் 28 கிலோ வெள்ளி, பன்னீர்செல்வம் ரூ.2374 மற்றும் 53 கிலோ வெள்ளியை முதலீடாக போட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள வெள்ளி ஷோரும்களூக்கு வெள்ளி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர். இந்த நிலையில் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது மகனும் பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான சத்திய நாராயணன் தொழிலை கவனித்தார்.

    இதனிடையே சத்திய நாராயணன் கூறியதன்பேரில் பன்னீர்செல்வம் ரூ.11.45 லட்சத்தை சேலம் 3 ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதற்கான பங்கு தொகை ரூ.18.67 லட்சத்தை சத்தியநாராயணன் எடுத்துக்கொண்டதோடு வெள்ளிபட்டறையில் இருந்த 500 கிலோ வெள்ளியையும் அவர் அபகரித்ததாக தெரிகிறது.

    வெளிமாநில விற்பனை வகையில் 1047 கிலோ வெள்ளிக்கான வரவு-செலவையும் சத்திய நாராயணன் கொடுக்க மறுத்து தன்னை மோசடி செய்ததாக பன்னீர்செல்வம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 615 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ஆகிய வற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    இதுபற்றி பன்னீர்செல்வம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் சத்தியநாராயணன் மற்றும் 2 பேர் சேர்ந்து தனது வீட்டில் வெள்ளி, பணத்தை திருடி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதைதொடர்ந்து சத்திய நாராயணன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • திருடுபோன இரும்பு கம்பிகளின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகேயுள்ள அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜான் (வயது 47). இவர் நேற்று பணியில் இருந்த போது அடையாளம் தெரியாத நான்கு பேர் அங்குள்ள கம்பிகளை திருடியுள்ளனர். அப்போது சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, இரும்பு கம்பிகளை மதில் சுவருக்கு வெளியே போட்டுவிட்டு, சுவர் மீது ஏறி தப்பிவிட்டனர்.

    இது குறித்து அவர் கட்டுமான நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். திருடுபோன இரும்பு கம்பிகளின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும். இது குறித்து தனியார் கட்டுமான நிறுவன பாதுகாவலர் ஜான் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு ரூ.2 லட்ச மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது
    • திம்மூர் ஊராட்சி ஒன்றியத்தில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். திம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வேம்பு, ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரூ.2 லட்சம் மதிப்பில் திம்மூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான என்.கே கர்ணன் தளவாடப் பொருள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், பெரியசாமி, முன்னாள் தலைவர்கள் பச்சமுத்து, செல்வராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், திம்மூர் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் வரவேற்றார். முடிவில் பிரபாகரன் நன்றி கூறினார். 

    ×