search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
    • 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

    மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

    இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

    • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

    நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர்பான ரசீது அனுப்பப்படுவது உண்டு.
    • காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேசமாட்டார்கள்,

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. சென்னை மாநகரில் தினமும் 5 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படும் நிலையில்15 பேர் மட்டுமே தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று அப்பீல் செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர் ன ரசீது அனுப்பப்படுவது உண்டு. அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல் துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று போலீசார் தெரித்துள்ளனர்.

    இதற்காக புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதா ங்கள் போன்றவற்றைக் காட்டி வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை முதலில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.

    அதன் பிறகு எந்த விதிமுறைகளில் சம்பந்தப் பட்ட வாகனம் ஈடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறை மூலமாக அவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் அது போன்று பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம் இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பம் வரை 31 கி.மீ. கடற்கரை உள்ளது.

    ப்ரோமனேட் கடற்கரை, பாண்டிமெரினா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

    இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர்.

    ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிப்பு.
    • அபராதம் மூலம் ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருந்துகள் இயங்குகின்றன.

    மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்
    • ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

    அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    • ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர்.

    ஈரோடு:

    திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் திருச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை ஈரோடு சோலார் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் வழியாக ரெயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அப்பகுதியில் இருந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்ததால் ரெயிலின் டிரைவர் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். தொடா்ந்து எந்தவித சிக்னலும் இல்லாததால் ரெயில் புறப்படுவதற்கு தாமதம் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் ரெயில் பாதை அருகே குப்பைகள் அப்புறப்படுத்தும் போது, ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர். முன்னதாக எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தபின் திருச்சி-பாலக்காடு ரெயில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிக்னல் கோளாறுக்கு காரணமான முத்துக்கவுண்டன் பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1 -0 என முன்னிலையில் உள்ளது.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

    • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது.
    • குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகரை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை இல்லா தெருக்கள், சாலைகளை மாற்றி அழகுப்படுத்தப்படுகிறது.

    சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இயற்கை உரம், பயோகியாஸ் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் தனியார் நிறுவனங்கள் பிளாண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது. வீடுகள், ஓட்டல்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என தனித்தனியாக பிரித்து குப்பைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கின்ற குப்பைகள் இயற்கை உரம், இயற்கை எரிவாயு மற்றும் மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் குப்பை கிடங்குகளில் குவியும் குப்பை குறைக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.

    அந்த வகையில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்குகிறார்கள். மக்கும் குப்பைகள் தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் பெறப்படுகிறது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வகையாக பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தனித்தனி பைகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதன்மூலம் எளிதாக தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள பிரதான குப்பை கிடங்கில் மொத்தமாக கொட்டப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு, பயோகியாஸ் தயாரிக்கப்படுவதால் குப்பைகள் தேக்கம் ஆவது இல்லை.

    இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து குப்பைகளை பிரித்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. வீடுகளில் தேங்கிய தேவையற்ற கழிவுகளை மக்கள் கொட்டினார்கள். குப்பைகளை பிரித்து வழங்காமல் மொத்தமாக கொட்டி வருகின்றனர்.

    இதனை தவிர்க்க மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. "என் குப்பை என் பொறுப்பு" என நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

    அதில் குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடிவந்தனர்.
    • சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

    இதுகுறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×