search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fine"

    • நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.
    • சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.

    மாஸ்கோ:

    ரஷியாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனை நீக்க மறுத்தநிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது கோர்ட்டு குற்றஞ்சாட்டியது.

    இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.407 கோடி (49 மில்லியன் டாலர்) அபராதம் விதித்து மாஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது.

    • கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    கங்கா தடுப்பணை பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ 10 வினாடிகள் ஓடுகிறது. அதில், மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஆபத்தான முறையில் வீலிங் செய்யும் காட்சிகள் உள்ளது. வீடியோவின் பின்னணியில் ஒரு பஞ்சாபி பாடலும் இசைக்கப்படுகிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து கான்பூர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை மடக்கி பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


    • வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
    • அரசு தரப்பில் 28 முக்கிய ஆவணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்(வயது25). இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் நிர்வாகி யான இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்டிக்காடு பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

    காரில் பயங்கர ஆயதங்களுடன் வந்த கும்பல் ஆதர்சை படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிஜில்(வயது27), பிரஜில்(28), மனு(27), ஷனில்(27), ஷிஹாப்(30), பிரஷ்னோவ்(32) ஆகிய 6பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 46 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அரசு தரப்பில் 28 முக்கிய ஆவ ணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நிஜில், பிரஜில், மனு, ஷனில், ஷிஹாப், பிரஷ்னோவ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். அவர்கள் 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சாலிஹ் தீர்ப்பு கூறினார்.

    அபராத தொகையை கட்டத்தவறும் பட்சத்தில் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுப விக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
    • 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

    மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

    இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

    • விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர்பான ரசீது அனுப்பப்படுவது உண்டு.
    • காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேசமாட்டார்கள்,

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. சென்னை மாநகரில் தினமும் 5 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படும் நிலையில்15 பேர் மட்டுமே தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று அப்பீல் செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர் ன ரசீது அனுப்பப்படுவது உண்டு. அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல் துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று போலீசார் தெரித்துள்ளனர்.

    இதற்காக புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதா ங்கள் போன்றவற்றைக் காட்டி வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை முதலில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.

    அதன் பிறகு எந்த விதிமுறைகளில் சம்பந்தப் பட்ட வாகனம் ஈடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறை மூலமாக அவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் அது போன்று பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம் இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும்.
    • புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும். ஸ்டாப் கடிகாரங்களின் அறிமுகம் தற்போது சோதனை அடிப்படையில் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்.

    புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். அப்படி தயாராகத பட்சத்தில், ஒரு இன்னிங்சில் இதேபோல் மூன்றாவது முறை நிகழும்போது 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

    • சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
    • ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
    • சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை அதிரடி.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

    நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததை அடுத்து, தனுஷ் தனித்து வசித்து வருகிறார்.

    இந்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் 17 வயது மகனுக்கு அபராதம் விதித்து சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தலைகவசம் அணியாமலும் ஆர் 15 ரக பைக்கை ஓட்டியதாக போலீசார் அபராதம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டம், கனி கிரியை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை பலாத்காரம் செய்தார்.

    இதேபோல் ஐதராபாத் அழைத்துச் சென்றும் அங்கு சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஓங்கோல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ஓங்கோல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகர் தீர்ப்பு வழங்கினார்.

    மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த மகபூப் பாஷாவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது ரூ.13,975 மதிப்பிலான 55 கிலோ அரிசியும், ரூ.620 மதிப்பிலான 6 கிலோ துவரம்பருப்பும், ரூ.350 மதிப்பிலான 7 கிலோ சர்க்கரை கூடுதலாகவும், ரூ.21 மதிப்பிலான பாமா யில் 1 லிட்டர் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையினை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறும் போது, தமிழ்நாடு முதல்- அமைச்சர் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசிய உணவு ப்பொ ருட்கள் தங்குதடை யின்றியும் தரமாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோ கம் செய்யப்ப ட்டு வருவதை பார்வையி ட்டதுடன், இந்நியாய விலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொரு ட்களின் விவரம் மற்றும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ம், அத்தியாவசியப் பொருட்க ளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நியாய விலைகடைக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் அத்தி யாவ சியப்பொரு ட்கள் முறை யாக கிடைக்கப்பெ றுகிறதா எனவும், தரமாக உள்ளதா எனவும், பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக மாற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்த ஆய்வின்போது, ரூ.13,975 மதிப்பிலான 55 கிலோ அரிசியும், ரூ.620 மதிப்பிலான 6 கிலோ துவரம்பருப்பும், ரூ.350 மதிப்பிலான 7 கிலோ சர்க்கரை கூடுதலாகவும், ரூ.21 மதிப்பிலான பாமா யில் 1 லிட்டர் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.14,875 அபராதம் விதிக்கப்பட்டு, துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபு ரியும் ரேஷன் கடை பணியா ளர்கள் மாற்றுப்பணி அல்லது துறை ரீதியாக பணிக்கு செல்லும் போது அறிவிப்பு பலகையில் கைப்பேசி எண் மற்றும் பணிக்கு செல்லும் விவரம் குறித்து எழுதி வைத்திட வேண்டும் என கலெக்டர் பழனிதெரிவித்தார்.ஆய்வின்போது, செஞ்சி வருவாய் தாசில்தார் ஏழுமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வள்ளியூர் பஸ் நிலையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வள்ளியூர்:

    வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வள்ளியூர் பஸ் நிலையம் மற்றும் மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம், செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ×