என் மலர்
நீங்கள் தேடியது "Fine"
ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம், பஞ்சாயத்து பகுதியில் கேரளாவில் இருந்து மாட்டு கழிவுகளை ஒரு லாரியில் ஏற்றி வந்து கொட்டி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை போலீசாருக்கு கூறினார். உடனடியாக ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் அங்கு விரைந்து சென்று அந்த லாரியை மடக்கினார். இதனால் கழிவுகள் மேலும் கொட்டப்படாமல் தடுக்கப்பட்டதோடு, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் லாரியில் ஏற்றி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் அங்கு கழிவுகளை கொட்டியதற்காக லாரிக்கு பஞ்சாயத்து சார்பாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம்அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தி லுள்ள அணைக்கரை அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில்மி கவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வருகின்றனர். காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் மண்டகப்படி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அப்போது ஒழுகச்சே ரியை சேர்ந்த புது தெரு சந்திரகாசு மனைவி சரஸ்வதி (வயது 50) என்ற பெண் தீ குண்டத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
- ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மதுரை
மதுரை மண்டல அமலாக்க ப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, கொங்கனாகுறிச்சி என்.சுப்பலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், வத்திராயிருப்பு, முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டு ரூ.38 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 941 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளரின் 94430-37508 செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
- ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இதனால் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக தண்டனை மற்றும் அபராதத்தை கடுமையாக்க மத்திய அரசு 2019-ல் மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தது.
இதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. அதற்கேற்ப மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு அபராத தொகைகளையும் உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு எந்தெந்த வகையில் அபராதம் விதிக்கப்படும் என்பதை விரிவாக பட்டியலிட்டு உள்ளார்.
மொத்தம் 46 வகையான குற்ற விதிமீறல்களுக்கு அபராத தொகை எவ்வளவு என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அரசாணையாகவும் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
மோட்டார் வாகனத்தை ஓட்டும் போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டினாலோ ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சாலைகளில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000மும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களை ஓட்டுவதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதி இல்லாதவர்கள் வாகனத்தை ஓட்டினால் முதன்முறை ரூ.1000-ம், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விதிகளை மதிக்காமல் அதிக ஒலி எழுப்பினாலோ, அதிக புகையுடன் வாகனங்களை ஓட்டி சென்றாலோ ஏற்கனவே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகை உயர்த்தப்படவில்லை.
உரிய பதிவெண்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.2500 அபராதமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.போக்குவரத்து வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனுமதி (பெர்மிட்) இன்றி ஓட்டினால் வசூலிக்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையும் அதிகரிக்கப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் இதே தொகையே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் உரிய அனுமதியின்றி போக்குவரத்து விதிகளை மீறி இயக்கினால் முதன்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.
உரிய இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டி போலீசில் விதி மீறினால் முதல் முறை ஆயிரமும், 2-வது முறை 4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றி சென்றால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். லாரிகளை நிறுத்த மறுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டு உள்ளன.
லாரிகளில் அதிக உயரத்தில் பாரம் ஏற்றி வந்தாலோ அல்லது அகலமாக பாரம் ஏற்றி வந்தாலோ ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றி சென்று ஒவ்வொரு பயணி வீதம் கணக்கீட்டு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
மோட்டார் வாகனத்தை புதுப்பிக்க தவறினால் முதல் முறையாக ரூ.500 அபராதமும், இரண்டாவது முறையாக இத்தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.
பிற மாநிலத்தில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களை 12 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்காவிட்டால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து அதே தவறு செய்தால் ரூ.1500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட மோட்டார் வாகனத்தை பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் முதல் முறை ரூ.500-ம், 2-வது முறை இதே தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.
மோட்டார் விதி அடையாள குறிகளை அகற்றினால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து இதே தவறுக்கு ரூ.1,500-ம், மோட்டார் விதிகளை மீறினால் ரூ.1,500, பொது இடத்தில் வாகனங்களை விபத்து ஏற்படும் நிலையில் நிறுத்தி இருந்தால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.
வாகனத்தில் முன்பகுதி அல்லது ஓடுகிற பகுதியில் நின்று பயணித்தாலோ அல்லது உட்கார்ந்து பயணித்தாலோ முதலில் ரூ.500-ம் அடுத்தடுத்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.
வாகன சோதனையின் போது, லைசென்சு, கண்டக்டர் லைசன்சு, பதிவு, பெர்மிட், தகுதி சான்று, இன்சூரன்ஸ் ஆவணங்களை காட்டாவிட்டால் முதலில் ரூ.500-ம், தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.
டிரைவிங் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு முதல் முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறையாக ரூ.5000 அபராதமும், கண்டக்டர் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
வாகன தயாரிப்பாளர், இறக்குமதியாளர், டீலர், விற்பனையாளர், வாகனத்தை ஆல்டர் செய்வதில் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் போக்குவரத்து புதிய அபராத விபரங்கள் தொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரும் அபராத விபரங்களை வெளியிட்டார். சென்னையில் மூடப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்த தகவல்களை கூகுல் மேப் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக புதிய செயலி ஒன்றை அவர் வெளியிட்டார்.
- மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்:
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அபராதம்
அதன்படி போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், விதிமுறைகள் மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் விபத்தை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி. காமிரா
மேலும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர். இதில் போக்குவரத்து விதி மீறும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்து விதி மீறியதாக 40 ஆயிரம் வழக்குககள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 15 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் இது மேலும் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
2800 வழக்குகள் பதிவு
மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கால கட்டத்தில் போதையில் வாகனம் ஓட்டிய 2800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்க–ளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டாதவர்களுடைய லைசென்ஸ்-ஐ தற்காலி–மாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிந்துரை செய்கிறோம்.
இதனை பரிசீலித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போதையில் வாகனம் ஓட்டியவர்களின் லைசென்சை ரத்து செய்து வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
- ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:
சாலை விதிமுறைகளை மீறி இயங்கி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சிவகுமரன் உத்தரவின் பேரில், பல்லடம், சின்னக்கரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், காங்கயம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, ரெயில் நிலையம் அருகில், 63 வேலம்பாளையம், ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 9 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 21 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.ஆய்வில் உரிய ஆவணம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உட்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தகுதிச்சான்று இல்லாத 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிகாரிகள் வாகனத்தணிக்கை மேற்கொண்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டேனியல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பன்னீர்செல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.
மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- பள்ளிகளின் அருகே பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது
சிவகிரி:
பள்ளிகளின் அருகே பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பீடி, சிகரெட் புகைப்பதாகவும், ஆங்காங்கே புகையிலை எச்சில் துப்பி பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஒருசிலர் நடந்து கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம், மெயின் பஜார், காய்கறி மார்க்கெட் பஜார், பள்ளிகள் அருகே மற்றும் பொதுஇடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதமும், பள்ளிகளின் அருகே கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்ததாக 2 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
- பண்ருட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படிநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறையே பயன்படுத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை வணிக வளாகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
அதோடு கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது துப்புரவு அலுவலர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் துப்புரவு மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொள் ளப்படும் என்று ஆணை யாளர் மகேஸ்வரி அறிவித்தார்.
- திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருந்தாா்.
- மது அருந்தியதாகக் கூறி மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.
திருப்பூர் :
திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள மகாலட்சுமி அபாா்ட்மெண்டில் வசித்து வருபவா் செல்வநாயகம். இவா் திருப்பூா் காட்டன் மில் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக ரூ.289.20 செலுத்தி 2019 ம் ஆண்டு நவம்பா் மாதம் முன்பதிவு செய்திருந்தாா்.
அதன் பின்னா் தனது மனைவி, மகளுடன் திரையரங்குக்குச் சென்றபோது, அவா் மது அருந்தியதாகக் கூறி அவரது மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.மேலும், டிக்கெட் தொகைக்கு உண்டான தொகையையும் அவருக்கு வழங்கவில்லை.இது குறித்து திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் செல்வநாயகம் வழக்குத் தொடுத்திருந்தாா்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரையரங்க உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.மேலும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் மற்றும் டிக்கெட் தொகையான ரூ.289.20 ஆகியவற்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீபா, உறுப்பினா்கள் பாஸ்கா், ராஜேந்திரன் ஆகியோா் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.11.51 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
- மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது.
மதுரை
மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மேலக்கரந்தை, முத்துலாபுரம், தூத்துக்குடி டவுன், திருச்செந்தூர், குரும்பூர், கோவில்பட்டி, நாகலாபுரம், புதூர், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், மணப்பாடு ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொ ண்டு, ரூ.71 ஆயிரம் அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.11 லட்சத்து 51 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






