search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி"

    • ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர்.

    ஈரோடு:

    திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் திருச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை ஈரோடு சோலார் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் வழியாக ரெயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அப்பகுதியில் இருந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்ததால் ரெயிலின் டிரைவர் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். தொடா்ந்து எந்தவித சிக்னலும் இல்லாததால் ரெயில் புறப்படுவதற்கு தாமதம் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் ரெயில் பாதை அருகே குப்பைகள் அப்புறப்படுத்தும் போது, ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர். முன்னதாக எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தபின் திருச்சி-பாலக்காடு ரெயில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிக்னல் கோளாறுக்கு காரணமான முத்துக்கவுண்டன் பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    • வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ளது எஸ்.ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமம் சிறுவத்தூர் ஊராட்சியிலும், சேமகோட்டை ஊராட்சியிலும் உள்ளது. அதே போல இந்த கிராமம் நெய்வேலிசட்டமன்ற தொகுதியிலும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் ஏரிப்பாளையம் கிராமம் தனித்துவிடப்பட்டுள்ளது என கூறி ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

    இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவமணி தலைமையில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இன்று காலை கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து பண்ருட்டி-மடப்பட்டு சாலை சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏரிப்பாளையம் கேட் அருகில் சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து அதில் அமர்ந்து சிறுவர், சிறுமியர் முதல்பெரியவர் வரை 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

    • ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    நாகர்கோவில்:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய

    ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,

    பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே நாஞ்சி க்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

    இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    அதற்கு பழனியப்பன் நகரில் இடம் ஒதுக்கி உள்ளோம். நமது ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒத்துழை ப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்று, தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வண்டார்குழலி நிம்மி, சகாயராணி, கல்பனா, வாசுதேவன், தாழம்பட்டி மதியழகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, விஜயரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தலைவர் லில்லி பாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்
    • சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது

    திருவட்டார் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலமோர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கைகாட்டி பிருந்தாவனம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்து உள்ளது. இதை சரிசெய்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பனிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சாலையை சரிசெய்வதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டபோது இந்த சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. சாலையை சரி செய்ய தமிழக வனத்துறையை சார்ந்த முதன்மை தலைமை வனபாதுகாவலர் சீனிவாஸ் ஆர் ரெட்டியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை அவர் பரிசீலனை செய்து அனுமதி அளித்தார். இதையடுத்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏசுராஜ், ஊராட்சி மன்ற செயலர் சாமுவேல், கவுன்சிலர்கள் சந்திரா ஜெயசீலன், ராணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    • சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
    • கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    0சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,

    சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.

    இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    • குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.
    • தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருமானூர் நீரேற்று நிலையத்தில் முதலில் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டது.

    இது 18 எம். எல்.டி. அளவிற்கு அமைக்க ப்பட்டு தஞ்சைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதை தவிர மற்றொரு ஆழ்குழாய் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுவும் 18 எம்.எல்.டி. அளவிற்கு அமைக்கப்பட்டு தயாரான நிலையில் உள்ளது.

    இந்த பணிகள் இன்னும் 2 மாதத்திற்குள் முடிந்து விடும்.

    இது இரண்டும் சேர்த்தால் 36 எம். எல்.டி அளவுக்கு தஞ்சை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதுதவிர முன்பு இருக்கக்கூடிய 23 எம். எல்.டி.யும் சேர்த்தால் சுமார் 60 எம்.எல்.டி. அளவிற்கு தண்ணீர் தஞ்சை மாநகருக்கு விநியோகம் செய்ய இருக்கிறது.

    நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 30 எம்.எல்.டி. 'அளவிற்கு தஞ்சைக்கு தண்ணீர் வந்தாலே போதுமானது.

    தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    இந்த பணிகள் மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சரின் ஒப்புதலோடு செய்து வருகிறோம்.

    இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி ஆகும். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.

    இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாநகராட்சி செய ற்பொறியாளர் பொறுப்பு ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    தென்தாமரைகுளம் :

    கரும்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டப் பணிக்கன் தேரி விளையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி தலைவர் தங்க மலர் சிவபெருமான் தலை மையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதி க்கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் உதவி மருத்துவர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் ரஜினி, கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், கால் நடை மருத்துவர் ஆசீர் எட்வின், ஊராட்சி துணை தலைவர் தமிழரசி, வார்டு உறுப்பினர்கள் ஞான வடிவு, அரிஹர சுதன், ஞானராணி, ஆல்வின் ராஜபால், கீதா, ராஜ்குமார், நாகம்மாள், மணிகண்டன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் காளி யப்பன் நன்றி கூறினார்.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×