search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
    X

     சித்தம்பலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பல்லடம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

    • குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
    • குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    பல்லடம் :

    உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்ப ட்டதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட ப்பட்டு இருந்தது. அதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி, அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதேபோல செம்மிபா ளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமை யிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையி லும், மல்லேகவுண்ட ம்பாளை யத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×