search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் ஓட்டல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்
    • ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

    அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    ×