search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Man"

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இதய பிரச்சனை காரணமாக முதியவர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் செல்லாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

    சம்பவதன்று வீட்டில் இருந்து வெளியேறி வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு அவரது லுங்கியால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
    • உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

    சென்னிமலை, ஜூன். 13

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.

    ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கூகலூர் அரிஜன காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து மாகாளி சத்தியமங்கலம் அடுத்த வேலாங்காட்டு தோட்டத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவரை அவரது மகன் சரவணன் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாகாளி சமைத்துக் கொண்டிருந்த போது மாகாளி வேட்டியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் உடல்நலம் மோசமாகி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனி 6-வது வீதியை சேர்ந்தவர் பொன்னரசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக மன சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னரசு சம்பவத்தன்று சல்பாஸ் மாத்திரையை (விஷ மாத்திரையை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பொன்னரசை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல்பா–ளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை–யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    செல்போன் பயன்படுத்த கூடாது என பெற்றோர் கண்டித்ததால் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரை, முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #Kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூரு மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகவாரா முதல் எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலையில் எலச்சனஹள்ளியில் இருந்து நாகவாராவுக்கு ஒரு மெட்ரோ ரெயில் புறப்பட்டது. காலை 11.15 மணியளவில் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு, அந்த ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர். அதுபோல, ஒரு வாலிபரும் ரெயிலில் ஏறுவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.

    இந்த நிலையில், அந்த வாலிபர் திடீரென்று ஓடிப்போய் ரெயில் முன்பு பாய்ந்தார். இதை பார்த்து அங்கிருந்த பயணிகள், மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்ததை கவனித்த டிரைவர், உடனடியாக மெட்ரோ ரெயிலை நிறுத்தினார். அத்துடன் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சுதாரித்து கொண்டு மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கு பயன்படும் மின் இணைப்பை துண்டித்தனர்.

    அதன்பிறகு, மெட்ரோ ரெயிலை டிரைவர் பின்னோக்கி எடுத்தார். அப்போது தண்டவாளத்திற்கு நடுவே தலையில் பலத்த காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அந்த வாலிபரை மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அவர், நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்ததும் வி.வி.புரம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து, மெட்ரோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பசவனகுடியை சேர்ந்த வேணுகோபால் (வயது 18) என்று தெரியவந்துள்ளது. 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோர் நடத்தி வரும் தையல்கடையில் வேணுகோபால் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நேரத்தில் வேணுகோபால் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் செல்போன் பயன்படுத்துவதை குறைக்கும்படி பெற்றோர் புத்திமதி கூறியுள்ளனர்.

    வேணுகோபால் மெட்ரோ ரெயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதை படத்தில் காணலாம். இது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.

    நேற்று முன்தினம் இரவும் செல்போன் பயன்படுத்த கூடாது என்று வேணுகோபாலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக மனம் உடைந்த அவர், இன்று (அதாவது நேற்று) காலையில் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில், மெட்ரோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வேணுகோபால், அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்திற்கு நடுவே விழுந்திருந்தார். இதனால் அவரது தலையில் மட்டும் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்க பயன்படும் மின்சாரத்தை ஊழியர்கள் உடனடியாக துண்டித்திருந்ததால் மின்சாரம் தாக்கி பலியாகாமல் வேணுகோபால் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தால் நாகவாரா முதல் எலச்சனஹள்ளி இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை அரை மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் மெட்ரோ ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது இதுவே முதல் முறை ஆகும். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்று நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வேணுகோபாலை நேற்று மாலையில் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வேணு கோபாலுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு குமாரசாமி அறிவுறுத்தினார்.

    அத்துடன் வேணுகோபால் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் முதல்-மந்திரி குமாரசாமி கேட்டு அறிந்து கொண்டார். மேலும் வேணுகோபாலின் பெற்றோருக்கு அவர் ஆறுதலும் கூறினார். பின்னர் நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமி புறப்பட்டு சென்றார். #Kumaraswamy
    மத்திய பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #DoubleDeathPenalty
    ரட்லாம்:

    மத்திய பிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டம் ஜவோரா நகரைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், 5 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை (மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை) கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுதொடர்பாக குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்தனர். அவர் மீது ஜவோரா நகரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குழந்தையின் தாய் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றவாளி மீதான குற்றம் நிரூபணமானது.

    இதையடுத்து குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதுதவிர 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் மத்திய பிரதேச சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #DoubleDeathPenalty
    மத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்டு காலில் விழுந்த பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #MadhyaPradeshElections #BJPMLA #ShoeGarland
    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பாஜக எம்எல்ஏவும் நகடா தொகுதியின் பாஜக வேட்பாளருமான திலிப் ஷெகாவத், கடந்த 19-ம் தேதி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கி வாக்கு கேட்டபடி சென்றார். இப்படி ஒருவரின் காலைத் தொட்டு வணங்கி எழுந்தபோது, அந்த நபர் திடீரென வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தார்.

    இதனால் கடும் அவமானமும் ஆத்திரமும் அடைந்த வேட்பாளர் திலிப் ஷெகாவத், செருப்பு மாலையை உடனடியாக கழற்றி வீசியதுடன், அந்த நபரை அடித்தார். பின்னர் அருகில் இருந்தவர்களும் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 19-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது. #MadhyaPradeshElections #BJPMLA #ShoeGarland



    தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் கட்சி தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #Telangana #Suicide
    ஐதராபாத்:

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தொண்டர் குருவப்பா (வயது 42). வருகின்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர்ராவை மீண்டும் முதல் மந்திரியாக்க மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு முன் அவர் எழுதியிருந்த கடிதத்தில் இந்த விவரம் இருந்தது. இவர் ஏற்கனவே தனி தெலுங்கானா அமைவதற்காக தற்கொலை செய்ய முயற்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லியில் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி, 23 வயது இளம் பெண் ஒருவரை அவரது உறவினரே 4 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி அச்சுறுத்தி உள்ளார். இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது.

    இதையடுத்து சமீபத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அதற்கு பிறகும் அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய அந்த உறவினர் வற்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இளம்பெண் தனது கணவர் வீட்டாரிடம் நடந்ததை கூறி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Delhi
    ×