search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலையில்"

    • பயணிகள் வலியுறுத்தல்
    • புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில், நவ.18-

    நெல்லையில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக 5 ஆண்டு கள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதல் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப் பட்டது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இரணியல் ரெயில் நிலை யத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் ரெயில் நிலையமும், மறு மார்க்கம் 15 கி.மீ. தொலைவில் குழித்துறை ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.

    இந்த காலகட்டங்களில் குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் இந்த நிறுத்தம் ரெயில்வே அதிகாரிகளால் அனு மதிக்கப்படவில்லை. திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் அறிவித்து இயக்கும் போது இந்த ரெயில் இயங்கும் 456 கி.மீ. தூரத்தில் திருச்சி முதல் மதுரை வரை உள்ள 156 கி.மீ. மட்டுமே எந்த வித கிராசிங் இல்லாமல் இயங்கும் இருவழிப்பாதை யாக இருந்து வந்தது. மீதமுள்ள மதுரை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள 300 கி.மீ. தூரம் ஒரு வழிபாதையாக இருந்த காரணத்தால் கிரா சிங்குக்காக வேண்டி அதிக அளவில் இந்த ரெயில் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நிறுத்தம் அனுமதி கொடுத்தால் இந்த ரெயில் சூப்பர் பாஸ்ட் என்ற அந்தஸ்தை இழந்து விடும் என்ற காரணத்துக்காக ரெயில்வே துறை மறுத்து வந்தது.

    தற்போது நிலமை மாற்றம் பெற்று மதுரை முதல் நாகர்கோவில் வரை இருவழிபாதை பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி கள் இந்த 2 மாதத்திற்குள் முடிவு பெற்றுவிடும். மீத முள்ள பணிகளும் முடிவு பெற்றுவிட்டால் திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வரும் வரை மறுமார்க்கமாக வரும் எந்த ஒரு ரெயிலுக்கும் கிராசிங் வேண்டி நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சேர்ந்த பயணி கள் கோரிக்கை விடுக்கின்ற னர். கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகையால் அடுத்த ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்க கூடாது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணி கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

    • குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் காவிரி வெள்ளம் காரணமாக 6 வீடுகளின் சுவர் நீரில் ஊறிய நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
    • இலவச வீடுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர் பகுதியில், காவிரி வெள்ளம் காரணமாக 6 வீடுகளின் சுவர் நீரில் ஊறிய நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

    இது பற்றி வருவாய்த்துறையினர் கூறுகையில், இந்த வீடுகளில் உள்ளவர்களை மண்டபத்தில் வந்து தங்கும் படி கூறியுள்ளோம். முதலில் வர மறுத்தனர். பின்னர் அபாயத்தை எடுத்து சொன்னபின் மண்டபத்தில் வந்து தங்க ஒத்துக்கொண்டனர். தற்காலிகமாக வாடகை வீடு பார்த்து தங்க கூறியுள்ளோம். இலவச வீடுகள் கட்டுமான பணி நிறைவு பெற்றதும், இலவச வீடுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
    • உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

    சென்னிமலை, ஜூன். 13

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.

    ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×