search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits"

    • கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
    • ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் நாயக்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயக்கர் மகன் சித்தராஜ்(19). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சித்தராஜ்க்கு கடந்த 3 மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது.

    இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 4-ந் தேதி இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, சித்தராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.
    • இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (68). இவரது கணவர் அண்ணாமலை (69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமலும், தன்னைப் பராமரிக்க யாரும் இல்லாததாலும் மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அருள்செல்வி அங்குள்ள ஆவின் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருள்செல்வி பரிதாபமாக இருந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி அருள் செல்வி (வயது 36).

    இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அருள்செல்வி அங்குள்ள ஆவின் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதில் பலத்த காயமடைந்த அருள்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருள்செல்வி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42) . இவர் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அருகே தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தேவராஜ் (46) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.தனது தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தாயார் இறந்து போனார். இந்நிலையில் தேவராஜுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. தாயார் இறந்த பின்பு குடிப்பழக்கம் அதிகமானது.

    இதனால் தனியே வசித்து வந்த தேவராஜ் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கி யண்ணன் 43 அவரிடம் நான் வாழ விரும்பவில்லை என்றும் இனிமேல் வாழ எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தார். மயங்கி கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி (27). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜீவ்காந்தி எரங்கா ட்டூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி சென்று மனைவியை பார்த்து வந்தார்.

    பின்னர் எரங்காட்டூரில் ராஜீவ்காந்தி தங்கியிருந்த வீட்டு நீண்ட நேரமாக கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பெருந்துறை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் வரப்பாளையம், பாச்சாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கிளீனராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டுவிட்டு பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி ரங்காத்தாள் மற்றும் மகன் சதாசிவம் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறம் தாழ் போட்டு இருந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் விட்டத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை கீழே இறக்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே தலை வலியால் அவதி அடைந்து வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உதயண்டியூர் பூசாரி–பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகரத்தினம் (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனிசாமி புத்தக கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நாகரத்தினம் கடந்த சில நாட்களாகவே தலை வலியால் அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நாகரத்தினம், அவரது கணவர் மகன், மகள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நாகரத்தினம் திடீரென தனக்கு தலை வலிப்பதாக கூறி வீட்டிலுள்ள அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார்.

    இதனால் அவரது கணவர்,மகன், மகள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாகரத்தினம் தூக்குபோட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×