search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taylor"

    • உடையில் தீப்பிடித்து டெய்லர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அவனியாபுரம் ஆசீர்வாதம் நகரைசேர்ந்தவர் செல்வகுமார் (57).இவர் காமராஜர்சாலை முனிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே டெய்லர்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் சாமிகும்பிட்டு பூஜை நடத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மகன் ஹரிஸ் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

    • மேலப்பாளையம் ஞானியாரப்பா 7-ம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இவர் வீட்டுடன் சேர்த்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
    • சம்பவத்தன்று இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    மேலப்பாளையம் ஞானியாரப்பா 7-ம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இவர் வீட்டுடன் சேர்த்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இது குறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். உடனே சிறுமி நடந்த விபரத்தை கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து டெய்லர் ராஜை கைது செய்தனர்.

    • சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×