search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
    X

    விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை

    • மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42) . இவர் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×