என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pathamadai"
- பத்தமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான 100 செட் இருக்கைகள், மேஜை மற்றும் 20 நாற்காலிகள் இலந்தைகுளம் சேஷசாயி பேப்பர் மில் மூலம் வழங்கப்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தளவாட பொருட்களை பெற்றுக் கொண்டார்.
பத்தமடை:
நெல்லை மாவட்டம் பத்தமடையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு தேவையான 100 செட் இருக்கைகள், மேஜை மற்றும் 20 நாற்காலிகள் இலந்தைகுளம் சேஷசாயி பேப்பர் மில் மூலம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சேஷசாயி மில் தலைவர் சுந்தர்ராஜன், மனிதவள மேம்பாட்டு அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பத்தமடை பேரூராட்சி தலைவர் அபிதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தளவாட பொருட்களை பெற்றுக் கொண்டார். மேலும் உதவி தலைமை ஆசிரியை வேலுத்தாய் நன்றி கூறினார்.
- அருள்செல்வி அங்குள்ள ஆவின் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார்.
- அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருள்செல்வி பரிதாபமாக இருந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி அருள் செல்வி (வயது 36).
இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அருள்செல்வி அங்குள்ள ஆவின் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தார்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் பலத்த காயமடைந்த அருள்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருள்செல்வி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 34). இவரது மனைவி சீதாலெட்சுமி(26).
கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
சிறிது நேரத்தில், ரமேசை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்