search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்தமடையில் வாலிபர் திடீர் சாவு
    X

    பத்தமடையில் வாலிபர் திடீர் சாவு

    • கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 34). இவரது மனைவி சீதாலெட்சுமி(26).

    கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில், ரமேசை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×