என் மலர்

    நீங்கள் தேடியது "Sudden death"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுகன்யா. தம்பதியின் மகள் மவுலிகா (வயது 7). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தனது மகள் மவுனிகாவுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    மவுனிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி தனது தாய் மற்றும் பாட்டியுடன் தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சிறுமி கண் விழிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் சுகன்யா சென்று பார்த்தபோது மவுலிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் செல்லக்கருப்பன்.
    • இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் செல்லக்கருப்பன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே தனலட்சுமி 2-வதாக கர்ப்பம் தரித்தார். அவருக்கு கடந்த 30-ந் தேதி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் தனலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தனலட்சுமி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

    குழந்தை பிறந்த 4 நாட்களிலேயே அவர் திடீரென இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

    புகார்

    இதனால் தனலட்சுமியின் உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி மீது புகார் கூறியுள்ளனர். இதையடுத்து சுகாதார துறை அதிகாரி ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். தனலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவருக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்துகள், மாத்திரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பிரசவம் பார்த்த டாக்டர் மற்றும் நர்சுகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், தலைவாசல் போலீசார், தனலட்சுமி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
    • சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். அவரது உடலுக்கு சேலம் மாநகர போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்
    • தனியார் மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்

    வெம்பாக்கம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குவாரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 9-ம் தேதி செய்யாறு அடுத்த சிப்காட் தொழிற்சாலையில் லாரியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து வந்தார்.

    சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்.

    பின்னர் லாரியில் படுத்திருந்தார். மறுநாள் காலை 10-ந் தேதி காலை அவர் மயங்கி கிடந்தார். அவரை சக ஊழியர்கள் எழுப்ப முயன்றனர். பின்னர் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழிலாளி திடீரென இறந்தார்.
    • முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள அச்சம் தவிர்த்தான் கீழத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(வயது28). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வை சேர்ந்த முருகன் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீரென பரிதாபமாக இறந்தார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தம்பிபட்டியை சேர்ந்தவர் சுந்தரம்மாள். இவரது மகன் ராஜ்குமார்(வயது48), மாற்றுத்திறனாளி. விபத்தில் ஒரு காலை இழந்தவர். இவர் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டல் மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நேற்று இறந்து விட்டார். இதுபற்றி சுந்தரம்மாள் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சகோதரி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது32) இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் திருவிழா நடந்தது. திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் நடந்தது.

    இதனை அம்மு அவரது கணவர் செந்தில் இருவரும் பார்த்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்து தூங்கினர். காலை 9 மணி அளவில் செந்தில் மாட்டுக்கு தண்ணீர் காட்ட தனது மனைவியை எழுப்பி உள்ளார்.

    அப்போது அசதியாக உள்ளதாகவும் நீங்களே மாட்டிற்கு தண்ணீர் காட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டிற்கு தண்ணீர் வைத்து விட்டு பின்னர் விவசாய வேலைக்கு செந்தில் சென்று விட்டார்.

    பிற்பகல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அம்மு படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செந்தில் மனைவியை எழுப்பி பார்த்தபோது கண் விழிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அம்மு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து அம்முவின் சகோதரி லட்சுமி (34) கீழ்கொடுங்காலூர் போலீசில் இன்று புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர் அருகே கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்,அருகில் சென்று பார்த்த போது, சரவணன் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.
    • சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. கடலூர் அடுத்த ரெட்டி ச்சாவடி செல்லஞ்சேரியை சேர்ந்தவர் சுமன் (வயது 30). இவரது மனைவி மலர். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.   சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பெண் குழந்தையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.   ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 14 நாளான பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி கால்நடை மருத்துவமனை அருகே பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அவினாசி செங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி அங்கப்பன் (வயது 50) என்பதும் குடிப்பழக்கம் உள்ள அவர் போதையில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin