என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் ெதாழிலாளி திடீர் சாவு
- சுரேசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
- சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை,
கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சுரேசுக்கு பிறந்த நாள். இதனையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிய புத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் குடும்பத்துடன் காரமடை ரங்க நாதர் கோவிலுக்கு சென்றார்.இதனை தொடர்ந்து அனைவரும் காரமடையில் மதிய சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கு சென்று ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் தனது கணவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை கேட்டு அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி தனது கணவரின் உடலை கட்டிபிடித்து கதறி அழுதார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த நாளன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்