search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private employee"

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் ஊழியர் பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாய்பாபா கோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணன் மனைவி கற்பகவல்லி ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா.
    • தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா (வயது 30). பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு தனது அறையில் மயங்கி கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால விக்னேஷ் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×