search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர் மரணம்
    X

    நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர் மரணம்

    • நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா.
    • தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா (வயது 30). பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு தனது அறையில் மயங்கி கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால விக்னேஷ் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×