search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி தொழிலாளி திடீர் சாவு
    X

    கூலி தொழிலாளி திடீர் சாவு

    • தேவாலயம் முன்பு பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வாலாஜா அடுத்த தென்னிந்தியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 69). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தென்னிந்தியாலம் பகுதியில் உள்ள சர்ச் முன் மணி தூங்கி யுள்ளார்.

    நேற்று காலை அங்கிருந்தவர்கள் மணியை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×