search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Table-chairs"

    • பத்தமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான 100 செட் இருக்கைகள், மேஜை மற்றும் 20 நாற்காலிகள் இலந்தைகுளம் சேஷசாயி பேப்பர் மில் மூலம் வழங்கப்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தளவாட பொருட்களை பெற்றுக் கொண்டார்.

    பத்தமடை:

    நெல்லை மாவட்டம் பத்தமடையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு தேவையான 100 செட் இருக்கைகள், மேஜை மற்றும் 20 நாற்காலிகள் இலந்தைகுளம் சேஷசாயி பேப்பர் மில் மூலம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சேஷசாயி மில் தலைவர் சுந்தர்ராஜன், மனிதவள மேம்பாட்டு அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பத்தமடை பேரூராட்சி தலைவர் அபிதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தளவாட பொருட்களை பெற்றுக் கொண்டார். மேலும் உதவி தலைமை ஆசிரியை வேலுத்தாய் நன்றி கூறினார்.

    ×