search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide by hanging"

    • அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோமதி (29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.
    • மனமுடைந்த கோமதி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோமதி (29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.

    இவருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த இடையப்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 1 1/2 வயதில் சர்வஜித், சஸ்த்விகா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    தொழில் நஷ்டம்

    திருப்பூரில் சிறு தையல் நிறுவனம் நடத்தி வந்த பிரகாஷூக்கு கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். மீண்டும் திருப்பூருக்கே சென்று தொழில் செய்ய விரும்பிய பிரகாஷ் நேற்று திருப்பூருக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    விஷம் கொடுத்தார்

    இதில் மனமுடைந்த கோமதி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த உறவினர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். 3 பேரையும் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் கோமதியையும், ஆண் குழந்தை சர்வஜித்தையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சஸ்த்விகா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் கோமதி, சர்வஜித் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 3 ஆண்டுக்குள் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை வன்கொடுமை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ஆத்தூர் ஆர்.டி.ஓ., வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. விசாரணைக்கு ஏத்தாப்பூர் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    குடும்பத்தகராறில் மனமடைந்த பட்டதாரிப் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சோழிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் -மனைவியிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் தனியாக வீட்டில் இருந்த போது மனைவியின் துப்பட்டாவை எடுத்து விட்டத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இன்று காலை அவரது உறவினர்கள் பார்த்த போது கோவிந்தராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
      • கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

      கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

      தற்கொலை

      இந்த நிலையில் மாரிமுத்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது . ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த மாரிமுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்து தற்கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
      • விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

      ராசிபுரம்:

      நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.

      ராமநாதபுரம் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் - தமிழரசி தம்பதியின் மகள் தீபலட்சுமி (28). விஜய், தீபலட்சுமி இருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (5), நிதிலேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

      தற்கொலை

      நேற்று முன்தினம் விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து விஜய் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது தீபலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், விஜய் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபலட்சுமியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தீபலட்சுமியின் தாயார் தமிழரசி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீபலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திருமணம் ஆன 6 வருடங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

      • பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
      • மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி துளசிமணி வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பழனிச்சாமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
      • கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      சேலம்:

      சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மாரப்பன் நேற்று மதியம் அந்தப் பகுதியில் உள்ள கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரப்பனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
      • வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

      பரமத்திவேலூர்:

      கரூர் மாவட்டம் தளவாபாளை யத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 32). இவர் புகளூரில் உள்ள டி.என்.பி.எல் காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

      தற்கொலை

      கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை சத்தியபிரியாவின் தாய் சாந்தி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

      பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யபிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

      காரணம் என்ன?

      சத்ய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.இது குறித்து

      பரமத்தி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்ய பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திருமணம் ஆகி 5 வருடத்திலேயே சத்யபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

      • பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார்.
      • பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் பழனியாண்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர்.

      அப்போது பழனியாண்டி வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பரமத்தி போலீசாருக்கும், அவரது மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

      தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பழனியாண்டியின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்
      • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

      வாணியம்பாடி:

      வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குளி மாகொல்லை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 46). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுதீர்நாத் (17). திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

      இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சுதீர் நாத் உடை மாற்ற செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென் றுள்ளார். பின்னர் வெகுநேர மாகியும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்த கதவை தட்டியுள்ளனர்.

      தூக்குப்போட்டு தற்கொலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுதீர்நாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

      இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதபடி அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திம்மாம் பேட்டை போலீசார், மாண வனின் உடலை பிரேத பரி சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

      மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாணவனின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
      • கதவை பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.

      அரக்கோணம்:

      அரக்கோணம் அடுத்த மாறன் கண்டிகையை சேர்ந்தவர் திருமூர்த்தி(வயது 27) இவரது மனைவி சங்கீதா திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

      திருமாறன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு சங்கீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருமூர்த்தி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      அரக்கோணத்தில் தொடரும் தற்கொலையால் இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

      • காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி.
      • போலீசார் விசாரணை

      ஜோலார்பேட்டை:

      தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (வயது28) இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் மாளவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி, பூக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த அஞ்சலி (26). என்பவரை திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

      இதனையடுத்து இருவரும் அஞ்சலியின் ஊரிலேயே வசித்து வந்தனர்.

      மேலும் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரது மனைவி அஞ்சலி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக இருந்து வந்த மனோஜ் குமார் இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

      தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      ×