தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

குடும்ப பிரச்சினையால் விரக்தி போலீசார் விசாரணை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

தூசி:

வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் செய்யாறு தாலுகா தூசி அருகே கூழ மந்தல் கிராமம் சிவப்பிரகாசம் நகர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் என்பவருக் கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் 2 நாட்க ளாக வீட்டில் பேசாமல் இருந்துள் ளார். நேற்று முன்தினம் ரஞ்சிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலை யில் தூக்கில் தொங்கியபடி பாலமுரு கன் ரஞ்சிதாவுக்கு செல்போனில் படம் அனுப்பி உள்ளார். இதை கண்ட ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உறவி னர்களுக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு சென்று பார்க் கும்படி கூறினார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியபடி இருந்த பாலமுருகனை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரஞ்சிதா தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com