search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த  பெண்   தூக்கு போட்டு தற்கொலை
    X

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • உமா சங்கரி மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிசேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி உமா சங்கரி (வயது 40). மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக உமா சங்கரி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது தந்தை சந்திரசேகர் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×