search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது.
    • காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி. மேட்டுப்பாளையம் வெங்கம்மேடு, நேரு தெருவை சேர்ந்தவர் அருள்குமார். கடந்த நாலு வருடங்களுக்கு முன்பு காமாட்சி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இதற்கு சிகிச்சைக்காக அருள்குமார் தான் வேலை பார்க்கும் கடையில் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    வீட்டில் இருந்த காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காமாட்சி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×