search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker committed"

    • ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
    • அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (52). கூலித் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    ராமுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. ராமுவின் அண்ணன் மகன் குணசேகரன் (37)என்பவர் அந்தியூர் அருகே அரசு பணிமனை அருகே குடியிருந்து வருகின்றார்.

    குணசேகரனுக்கு ராமு போன் செய்து நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன். நான் இறந்த பிறகு எனக்கு நீ, தான் காரியம் செய்ய வேண்டும் என்று பேசி விட்டு போனை வைத்து விட்டார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ராமுவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு உள் பக்க மாக மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். ெபாதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ராமு இதே போன்று பலமுறை விளை யாட்டாக போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    அதே போல் விளை யாட்டாக அவர் பேசி வரு கிறார் என அவரது குடும்பத்தினர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது விளையாட்டு வினையாக முடிந்து விட்டது.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×