என் மலர்

    நீங்கள் தேடியது "இளம்பெண்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காதலருடன் இளம்பெண் மாயமானார்.
    • தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அர்ச்சனாதேவி(வயது20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்புக்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இந்த நிலையில் உறவுக்கார வாலிபர் ஒருவர் அழகர்சாமிக்கு செல்போனில் அழைத்து அர்ச்சனாதேவி தன்னுடன் இருப்பதாகவும் தேட வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின்பு அர்ச்சனாதேவி போன் செய்து தன்னை தேடவேண்டாம் என கூறிவிட்டு செல்போனை அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு அழகர்சாமி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழைய டெலிபோன் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் பாலசங்கீதா(25). வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் நேரு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
    • அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வெம்பகோட்டை அருகே உள்ள சிவலிங்கா புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது34). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு எனக்கும், தென்காசி மாவட்டம் குறிஞ்சா குளத்தை சேர்ந்த கார்த்தி கேயன்(43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீரெ ன்று கணவர் விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்திடுமாறு வற்புறுத்தி யுள்ளார். இதற்கு மறுக்கவே, கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் மறுத்ததால் துன்புறுத்தி னார்.

    இது தொடர்பான பிரச்சினையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மோகன்-கிருஷ்ணவேணி ஆகியோர் தகராறு செய்து எனக்கும் , என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு உத்த ரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசா ரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
    • அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலுார்: 

    பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கிராமத்தை சேர்ந்த வர் அஸ்லாம் மனைவி அல் ஜாமைமா(36). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உசிலங் காட்டு வலசை கிராமத்தை சேர்ந்தவர் மருங்கப்பன் மகன் ராஜசேகர்(36), அவர் அல்ஜாமைமா வீட்டுக்கு சென்று உங்களது கணவர் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறினார். அந்த பணத்தை உடனே வட்டியு டன் கொடுக்க வேண்டும் என்று கூறி அவரை மிரட்டி வீட்டின் கதவை பூட்டினார். அவருடைய குழந்தைகள் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே விடுவிப்ப தாகவும் கூறியதாக தெரி கிறது.

    இதையடுத்து அல்ஜாமை மா ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க ராஜிடம் புகார் அளித்தார். அவரது உத்திரவின் பேரில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பாடை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஜாண் (வயது 35). தக்கலை அருகே காப்பீடு முகவராக பணி புரிந்து வருகிறார். இவர் செட்டிச் சார் விளையை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் அபிஷா என்பரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி அபிஷாவை திடீெரன காணவில்லை. வீட்டு பீரோ வில் இருந்த வினோத்ஜாண் தாயின் 18½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை யும் அவர் எடுத்து சென்று விட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அபிஷா ஆகஸ்ட் 28-ந்தேதி கோட்ட யத்தில் சுற்றி திரிவதாக வினோத்ஜா ணுக்கு தகவல் கிடைத்தது.

    நகைகள் மற்றும் பணத்துடன் அபிஷா மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் வினோத்ஜாண் புகார் தெரிவித்தார். ஆனால் அபிஷாவை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அடுத்த சோழத்த ரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பியாபிள்ளை மகன் லெனின் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த 27 வயது பெண்ணை கடந்த 2017-ல் இருந்து காதலித்துள் ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கருவுற்றார். திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறத்தி னார். தனது அக்காவிற்கு திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வ தாக உறுதி கூறிய லெனின், இளம்பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்படு கிறது.

    கடந்த மார்ச் மாதம் லெனின் அக்காவிற்கு திரு மணம் நடந்துள்ளது. இருந்த போதும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலங்கடத்தி யுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த இளம்பெண், சேத்தியாத் தோப்பு மகளிர் போலீ சாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்வ தாக போலீசாரிடம் லெனின் உறுதியளித்துள் ளார். இதையடுத்து அந்த இளம்பெண் லெனினை தொடர்பு கொண்டு கேட்ட போது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஊரை விட்டு வெளியூ ருக்கும் சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப் பட்ட இளம்பெண், சேத்தி யாத்தோப்பு மகளிர் போலீ சாரிடம் மீண்டும் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றிய லெனினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
    • சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர். 

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சாவில் மர்மம் நீடிக்கிறது.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையில் வடுகபட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

    இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை கொன்று கிணற்றில் வீசியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13 நாட்களாகியும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இறந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டி ருந்ததால் கொலை செய்து கொண்டு வந்து இந்த கிணற்றில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்து வரும் வழியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட காவல் நிலையங்களுக்கும் தகவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியாததால் சமீபத்தில் யாரேனும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன பெண் பற்றிய புகார் ஏதும் உள்ளதா? என்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இறந்த பெண், ரோஸ் கலர் சுடிதார், காட்டன் பேண்ட், அணிந்துள்ளார், காலில் கருப்பு கயிறு கட்டியுள்ளார்.

    இது தவிர இந்த பெண்ணின் சடலத்தை காரில் தான் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத், உத்தர வின்பேரில், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் கொண்ட தனி படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சகாய ஜெனீஸ்டன் சவுதி அரே பியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்
    • சாந்தூஸ் மேரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.