search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்"

    • பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார்.

    பொம்மைகள் மீது பெண்களுக்கு அதிக ஆசை இருப்பதை காண முடியும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மைகள் மீதான காதலால் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பெலிசிட்டி காட்லெக் என்ற 25 வயது பெண் தன்னை பொருட்கள் மீதான ஈர்ப்பாளர் என்று கூறி உள்ள அவர், பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பேய் பொம்மையான கெல்லி ரோஸியுடன் முதல் திருமணத்தை மேற்கொண்ட பெலிசிட்டி தற்போது ராபர்ட் என்ற ஆண் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், இவரின் துணையுடன் 10 பொம்மை குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேச்சல் லூனா, பில்லி என தற்போது 10 பொம்மை குழந்கைள் இருப்பதாக கூறி உள்ள பெலிசிட்டி, ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டதால் கெல்லி பொறாமை கொள்ள மாட்டாள் எனவும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
    • ருக்‌ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லியில் துவாராகாவின் ராஜபுரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகின்.

    இவர் அப்பகுதியில் உள்ள டப்ரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ருக்ஷாரை (வயது26). கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. மாயமான எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ருக்ஷா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். பிளாட்டுக்குள் நுழைந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய போது ருக்ஷார் கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் அலமாரியில் வீசப்பட்டதும் தெரியவந்தது.

    அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. கழுத்தை கத்தியால் நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அவரது உடல் கதவு அருகே உள்ள அலமாரியில் அமர்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் அங்கித்சிங் கூறினார்.

    இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    ருக்ஷார், குஜராத்தின் சூரத் பகுதியை பூர்வீகமாக கொண்ட விபால் டெய்லர் என்ற வாலிபருடன் கடந்த 1½ மாதங்களாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இருவரும் அந்த வீட்டில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்ஷார் அவரது தந்தைக்கு போன் செய்துள்ளார்.

    அப்போது தனது நண்பரான விபால் டெய்லர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளாராம். எனவே அவர் ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விபால் டெய்லரை தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

    சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

    இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டாக அனாதையாக இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவருகிறார்.
    • டெல்லியில் இதுவரை சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்தவர் பூஜா ஷர்மா. இவர் ஷாஹ்தரா பகுதியில் வசித்து வருகிறார். மருத்துவமனைகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் பல உடல்களுக்கு பூஜா ஷர்மா இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    கடந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பம் அல்லது உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளேன்.

    30 வயதான எனது மூத்த சகோதரர் ஒரு சிறிய சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் தந்தை கோமா நிலைக்குச் சென்றார். தனது சகோதரனுக்கான இறுதிச்சடங்குகளை நானே செய்தேன். அப்போதிருந்து இந்த சேவையை செய்துவருகிறேன்.

    ஆரம்பத்தில் குடும்பங்கள் அல்லது இருப்பிடம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற நான் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டேன். அதன்பின் இப்போது காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகள், உரிமை கோரப்படாத உடல்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்கின்றன.

    இறுதிச்சடங்குகள் செய்ய சுமார் 1,000 முதல் 1,200 ரூபாய் வரை ஆகும். நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன். எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராகப் பணிபுரிகிறார். எனது தாத்தாவின் ஓய்வூதியத்தில் நான் இவற்றை செய்து வருகிறேன்.

    இந்தப் பணிகளை செய்வதற்காக பல சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் செய்யும் வேலையை பலர் தடையாகப் பார்க்கிறார்கள். என்னைச் சந்திக்க விடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர். இந்தப் பணிகளைச் செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன என தெரிவித்தார்.

    உரிமை கோரப்படாத உடல்களுக்கு ஒரு பணியாக தன் சொந்த செலவில் மனமுவந்து இறுதிச்சடங்கு செய்து வரும் இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
    • நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை உக்கடம் அருகே உள்ள வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி அகமது ஆகில் (வயது25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் சமையல் தொழிலாளி புதிதாக செல்போன் வாங்கினார். அந்த செல்போனில் அவர் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் போது அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வைத்து இருந்தார்.

    அந்த வீடியோக்களை காண்பித்து இளம்பெண்ணை மிரட்டி, அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    மேலும் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை மிரட்டி அவரும் பணமும் கேட்டு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்த இளம்பெண் பல்வேறு தவணைகளாக அகமது ஆகிலுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச புகைப்படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி அவருடன் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அகமது ஆகிலை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
    • அதிர்ச்சியடைந்த உறவினர்கள் எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது33). இவர் கோவளத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

    அதே மருத்துவமனையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்(28) என்பவர் சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார். ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்ததால் சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

    சம்பவத்தன்று சூர்யா, கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண்ணை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்திருந்தார்.

    இந்நிலையில் அந்த அறைக்கு காதலன் சரத்தை, சூர்யா வரவழைத்துள்ளார். அப்போது அவர், சூர்யா அழைத்து வந்த பெண்ணுக்கு மது கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அதனை இளம்பெண் குடிக்க மறுத்திருக்கிறார். இருந்தபோதிலும் அவரை வலுக்கட்டாயமாக மது கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்திருக்கின்றனர்.

    இதனால் அந்த இளம் பெண், சிறிது நேரத்தில் மயங்கினார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை மயக்க நிலையிலேயே சரத் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இளம்பெண்ணை சரத் பாலியல் பலாத்காரம் செய்ததை சூர்யா தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.

    பின்பு சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார். அதன் பிறகே, தனக்கு நேர்ந்த கொடுமை அவருக்கு தெரியவந்தது. மேலும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை சூர்யா வீடியோ எடுத்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்பு அந்த இளம்பெண், அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    சம்பவம் நடந்தது கோவளம் என்பதால், அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கோவளம் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்பு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மது கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயங்கச் செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சரத் கைது செய்யப்பட்டார். காதலனுக்கு இளம்பெண்ணை விருந்தாக்கிய சூர்யாவும் கைது செய்யப்பட்டார். பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுக்க பயன்படுத்திய அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இளம்பெண்ணை காதலனுக்கு விருந்தாக்கிய பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கோவளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
    • உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராமர். ஆடு வியாபாரி. இவருக்கு அரிய நாச்சியார் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர. இவரது 2-வது மகள் உமா மகேஸ்வரி (24). இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார்.

    இந்நிலையில் ராமருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உமா மகேஸ்வரி தந்தையுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வந்தார். இதையடுத்து நேற்று ராமருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது தாயிடம் தந்தை ராமர் என்னை படிக்க வைப்பதற்காக கஷ்டப்பட்டு வேலை செய்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமா மகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மகேஸ்வரியை தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு கடந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் தேடிப்பார்த்தனர். அப்போது உமா மகேஸ்வரி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உடல் நலம் பாதிப்பால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
    • கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பொன்னேரி சின்ன கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி பிரியா (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.

    இந்நிலையில் பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இத னால் பிரியா ஏற்கனவே பழகி வந்த கோபால கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்தார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு பொன்னேரி அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கோபால கிருஷ்ணனை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கள்ளக்காதலியை அடையும் போட்டியில் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே புழல் அருகே காரில் தப்பி செல்ல முயன்ற பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரத்த கறைபடிந்த 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கோபால கிருஷ்ணனுடன் உள்ள தொடர்பை பிரியா தவிர்த்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபால கிருஷ்ணன், பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதையடுத்து கோபால கிருஷ்ணனை தீர்த்துகட்ட முடிவு செய்த பிரியா இதுபற்றி தனது மற்றொரு கள்ளக்காதலனான ரவுடி ஆனந்தனிடம் கூறினார். அவரும் பிரியாவை அடையும் ஆசையில் கோபால கிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    அவர்களது திட்டப்படி பிரியா, கள்ளக்காதலன் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் அரிவாள் கத்தியுடன் நேற்று இரவு கோபால கிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஆனால் கோபால கிருஷ்ணன் நண்பர்களை பார்க்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்றால் அங்கு சென்று அவரை தீர்த்து கட்டிவிட்டனர். கோபால கிருஷ்ணனை அரிவாளல் வெட்டி கொன்ற போது அருகே நின்ற கள்ளக்காதலி பிரியா அதனை ரசித்து பார்த்து உள்ளார். பின்னர் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் கொலையாளிகள் அனைவரும் பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து தனியாக நின்ற பிரியா அவ்வழியே வந்த காரில் சவாரி கேட்டு புழல் பகுதிக்கு தப்பி சென்ற போது போலீசாரின் சோதனையில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கைதான பிரியா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் கள்ளத் தொடர்புகள் அதிகமானதால் லட்சுமணன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டு அவ்வப்போது வந்து தனது குழந்தைகளை மட்டும் பார்த்து சென்று உள்ளார்.

    கணவர் வீட்டுக்கு வராததால் மேலும் சந்தோஷம் அடைந்த பிரியா பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கோபால கிருஷ்ணன் தன்னுடன் தொடர்பை தொடர கூறியதால் ஏற்பட்ட மோதலில் அவரை மற்றொரு கள்ளக்காதலனை ஏவியே பிரியா தீர்த்து கட்டிவிட்டார்.

    இந்த கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • இளம்பெண், 10-ம் வகுப்பு மாணவர், செவிலியர் மாயமானர்கள்.
    • மாரனேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகரத் அருகேயுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 29). இவரது மனைவி தெய்வலட்சுமி (25). சுப்பு ராஜ் தனியார் நிறுவனத் தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கி டையே தெய்வலட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    வாலிபருடன் காதல்

    திருமணத்துக்கு முன்ன தாக தெய்வலட்சுமி அயன் ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரை காத லித்து வந்துள்ளார். அத னால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் மல்லாங்கிணறு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான தெய்வலட்சுமியை தேடி வருகிறார்கள்.

    பள்ளி மாணவர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவரது மகன் 16 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் பின்னர் மாயமானார். இதுபற்றி அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நர்சு மாயம்

    சிவகாசி அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசின்னம்மா (வயது 40). இவரது 18 வயது மகள் 10-ம் வகுப்பு முடித்து விட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் வெளியில் சென்றார்.

    அதன்பிறகு அவரை காண வில்லை. இதுகுறித்து தங்க சின்னம்மா கொடுத்த புகா ரின் பேரில் மாரனேரி போலீசார் விசாரித்து வருகி றார்கள்.

    • ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து இருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம்பெண் கண்டித்தும் ஆட்டோ டிரைவர் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.

    இதனால் பொறுமை இழந்த இளம்பெண் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் அந்த டிரைவரை ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் டிரைவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து சென்றார். சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் இழுத்துபோட்டு செருப்பால் தாக்கும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ×