என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே இளம்பெண் மாயம்
    X

    கோப்பு படம் 

    குளச்சல் அருகே இளம்பெண் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவர் குளச்சல் போலீசில் புகார்
    • பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பத்தறை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை தொழிலாளி. இவரது மனைவி அபிஷா (வயது 30). இருவருக்கும் கடந்த 2017-ல் நெய்யூரில் வைத்து திருமணம் நடந்தது.இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.கடந்த 12-ந்தேதி அபிஷா பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த தங்கத்துரை வீடு பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அபிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிஷாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×