search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young lady"

    • இளம்பெண், 10-ம் வகுப்பு மாணவர், செவிலியர் மாயமானர்கள்.
    • மாரனேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகரத் அருகேயுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 29). இவரது மனைவி தெய்வலட்சுமி (25). சுப்பு ராஜ் தனியார் நிறுவனத் தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கி டையே தெய்வலட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    வாலிபருடன் காதல்

    திருமணத்துக்கு முன்ன தாக தெய்வலட்சுமி அயன் ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரை காத லித்து வந்துள்ளார். அத னால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் மல்லாங்கிணறு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான தெய்வலட்சுமியை தேடி வருகிறார்கள்.

    பள்ளி மாணவர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவரது மகன் 16 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் பின்னர் மாயமானார். இதுபற்றி அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நர்சு மாயம்

    சிவகாசி அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசின்னம்மா (வயது 40). இவரது 18 வயது மகள் 10-ம் வகுப்பு முடித்து விட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் வெளியில் சென்றார்.

    அதன்பிறகு அவரை காண வில்லை. இதுகுறித்து தங்க சின்னம்மா கொடுத்த புகா ரின் பேரில் மாரனேரி போலீசார் விசாரித்து வருகி றார்கள்.

    • சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அவினாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம், லட்சுமி நகரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 30 அடி ஆழம் கொண்டது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால கிணற்றில் நீர்மட்டம் சற்று உயர்ந்து 8 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. உடனே இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில், அவினாசிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி எஸ்.கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்று தெரியவந்தது. சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக காணப்படும் இந்த பெண், எப்படி இறந்தார் என்று தெரியவில்ைல. யாராவது இவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல கோணங்களில் அவினாசிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார்.

    காங்கயம்:

    காங்கயம், உடையார் காலணி, பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வசிப்பவர் மல்லிகார்ஜூனன். இவர் காங்கயத்தில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை செயது வருகிறார். இவரது மனைவி சித்ரா(வயது 25). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். மதியம் 2மணிக்கு மல்லிகார்ஜூனன் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    • ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24).
    • வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24). சம்பவத்தன்று வேல்சக்தி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த வேல்சக்தி மனைவி மற்றும் மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான தவசிகனியை தேடி வருகின்றனர்.

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் செல்வலட்சுமி. இவரது 32 வயது மகள் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செல்வலட்சுமி அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வருகிற 27-ந் தேதி கோவையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தார். செல்வலட்சுமி அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த் தும் பலனில்லை. இதற்கி டையே சகோதரியின் கணவரிடம் செல்போனில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு போனை அணைத்து வைத்து விட்ட தாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்வலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மற்றொரு சம்பவம்

    நரிக்குடி அருகே உள்ள புரையறைவாசித்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மணி. இவரது மனைவி லாவண்யா(25). குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லாவண்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பிச்சை மணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.

    • பிளஸ்-2 மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள சேஷபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வளர்மதி(34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வளர்மதிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வளர்மதி மகளுடன் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சிவகாசி பராசக்தி காலனி யை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று சலூன் கடைக்கு சென்று மாணவர் முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை முடியை சரியாக வெட்ட வில்லை என கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தொப்பி அணிந்து கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் தொப்பி அணிந்துவர தடை விதித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவரது மகள் அச்சின் (வயது 19). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் குறித்து அவரது தாய் ரேவதி உசிலம்பட்டி டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது 17 வயது மகள் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்-தனியார் ஊழியர் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் புஷ்பகலா (வயது 23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று வேல்முரு கன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத் தில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான புஷ்பகலாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் முத்துசங்க ரன் (36). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடன் கொடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கணவரை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி முத்துமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணன்கோவில் உதயா நகரை சேர்ந்தவர் நஜூமுதீன். இவரது மகன் பசீல்ரகீம். இவர் வெளியூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் நஜூமுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயமாயானார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் நந்திரெட்டிபட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் கோபி–ராஜ் மகள் மலர் (வயது 19). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகள் மலரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்து–பட்டி போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட நக்கலக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை (62) வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    கடந்த 4 மாதங்களாக மலர் அங்கு தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மலர் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவரது தாத்தா கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீ–சார் வழக்குப்பதிவு செய்து மாயமான மலர், தானாகவே எங்கேனும் சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்கள்.

    • வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • சந்திரலேகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). விவசாயி இவரது மகள் சந்திரலேகா (20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே, ஏதாவது வேலை தேடி செல்லுமாறு சந்திரலேகாவிடம் அவரது தந்தை முருகன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்திரலேகா வீட்டில் இருந்த எலி பேஸ்டை கடந்த 16-ந்தேதி சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

    அவரை உடனடியாக மீட்ட பெற்றோர், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சந்திரலேகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரலேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி- இளம்பெண் மாயமாகினர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த வர் சுந்தரராஜன். இவரது மகள் சுபஸ்ரீ(வயது23). முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு கள் செய்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சுபஸ்ரீ கூறியுள்ளார்.

    அதற்கு அவரை பற்றி விசாரித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தந்தை கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீ மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. இதை தொடர்ந்து பாண்டியன்நகர் மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் சுந்ததராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சி புரத்தை சேர்்ந்த நடராஜ். இவரது மகள் அங்காளஈஸ்வரி(19). காக்கிவாடன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை ேபாலீஸ் நிலையத்தில் நடராஜ் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • மகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள எம்.ேவலன்குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 3 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்யா சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.

    சம்பவத்தன்று மகளை அழைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சவுந்தர்யா அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின்பேரில் தாலுகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் கரும்பு விற்கும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை போலீசார் மீட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சந்தோஷ் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து தமராக்கி கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×