search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புளியங்குடியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

    புளியங்குடியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகேசன். இவரும், அதே பகுதியை சேர்ந்த கற்பகசெல்வி(33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  கற்பக செல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் கடன் வாங்கியதாகவும், அதனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனை அடைப்பதற்கு மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

     இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×