search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal contact"

    • அஸ்ரப் அலி யூசுப்புக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
    • அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை 

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி யூசூப் (வயது 34). காய்கறி வியாபாரி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் அஸ்ரப் அலி யூசூப்புக்கு காளம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அஸ்ரப் அலி யூசூப்பின் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியை பிரிந்து கள்ளக்காதலி வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் இருந்த அஸ்ரப் அலி யூசூப் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பேரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    ஆனைமலை

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தனது குழந்தையுடன் மாயமாகி விட்டார். இளம்பெண்ணின் கணவர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவ–ருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்கா–தலை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து இளம்பெ–ண்ணின் கணவர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றிய தகவல் எனக்கு தெரிந்ததும், நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எனது மனைவி எனது மகனுடன் அந்த வாலிபருடன் சென்றி–ருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகனை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×