search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கள்ளக்காதலி வீட்டில் மயங்கி விழுந்த  காய்கறி வியாபாரி
    X

    கோவையில் கள்ளக்காதலி வீட்டில் மயங்கி விழுந்த காய்கறி வியாபாரி

    • அஸ்ரப் அலி யூசுப்புக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
    • அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி யூசூப் (வயது 34). காய்கறி வியாபாரி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் அஸ்ரப் அலி யூசூப்புக்கு காளம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அஸ்ரப் அலி யூசூப்பின் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியை பிரிந்து கள்ளக்காதலி வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் இருந்த அஸ்ரப் அலி யூசூப் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பேரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×