search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl commits"

    • மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
    • பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிரதாஸ். இவர் அந்தியூரில் மளிகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரீத்திபா (16) என்ற மகள் உள்ளார்.

    பிரீத்திபா 10 -ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தர்மபுரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரீத்திபா அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பிரீத்திபா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்திபா இது போல் ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருந்தார். தற்போது 2-வது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்து விட்டார்.

    • நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.
    • திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன். ஈரோடு ெரயில்வே யார்டூ மாஸ்டர் அலுவலக எழுத்தர் ஆக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி திவ்யா வயது (24). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நவநீதகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சமாதான மாகியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு திவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது. 

    ×