search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு"

    • இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது52), கூலி தொழிலாளி. இவர் சுமார் ஆறு மாதம் முன்பு பாக்கு மரத்தில் ஏறியதில் தவறி கீழே விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் மனைவி ரவிக்கு சாப்பாடு கொண்டு கொடுக்க சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் இவரை தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு சேர்த்தனர். பின்னர் கலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
    • இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.

    இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அடுத்த சூழால் நெய்தவிளை பகுதியை சேர்ந்தவர் விசுவம்பரன். இவரது மகன் அரவிந்த் (வயது 26). இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுதொடர்பாக விசுவம்பரன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவிக்கு இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி விட்டு பரிதாபம்
    • மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    பத்துகாணி நிரப்பு ரோடு லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ஹரிஹரன் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நளினி (45). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    ஹரிஹரன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள் ளார். இந்நிலையில் அவரது வீட்டை அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள் ளார். இதில் இவர்க ளுக்குகிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹரன் பலமுறை கூறியுள்ளார்.

    ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை, இதனால் அவர் பத்துகாணி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் போலீசார், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன ஹரிஹரன் என்ன செய்வது என்று தெரியாமல், மன உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி நளினிக்கு, தான் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் இருப்பதாகவும், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாகவும் இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி உள்ளார். இதனால் பயந்து போன நளினி தனது உறவினர்களை, லாட்ஜிக்கு அனுப்பி பார்க்கும்படி கூறியுள்ளார். அப்போது ஹரி ஹரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவரது மனைவி நளினி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆடிட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.
    • வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் பிபின் ராஜ் (வயது 21). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிபின்ராஜ், தான் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பிபின் ராஜை பெற்றோர் சமதானம் செய்துள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது வீட்டு மேல் மாடி அறைக்கு சென்ற பிபின் ராஜ் அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வி.ஓ.சி வீதி யை சேர்ந்தவர் சின்னசாமி (63). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கட்டிட கூலி தொழிலாளி யான சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கள்ளி ப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவிழா நடந்தது. இந்த விழாவுக்கு சின்னச்சாமி சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அந்த வழியாக வந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து 2 தர ப்பினரும் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை சின்னசாமி தனது மகன் ரவியிடம் போலீஸ் நிலை யத்திற்கு செல்ல வேண்டும் என கூறி வந்ததாக தெரி கிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்தும் அவரது மகன் ரவி வீட்டுக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சின்னசாமி தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

    இதையடுத்து உடனடி யாக அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் சின்ன சாமியை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சின்னசாமி உடல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சின்னசாமி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் பிரகாசம் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி தமிழ் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 42). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடை யே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சங்கீதா அவரது கணவரை பிரிந்து பு.புளியம்பட்டி காந்திபுரம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து தமிழ் நகரில் பிரகாசம் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சங்கீதா பிரகாசம் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு மூடப்பட்டு இருந்தது. ஆனால் நீண்ட நேரம் கதவு திறக்கப்பட வில்லை.

    இதையடுத்து சங்கீதா அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது வீட்டில் விட்ட த்தில் பிரகாசம் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிரகாசத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது
    • வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    பவானி

    பவானி அருகே உள்ள காடையாம்பட்டி முருகன் கோவில் வீதியில் வசிப்பவர் ஆனந்த் (21). கட்டிட தொழிலாளி.

    மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆனந்தின் தாய் கண்டித்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவர்கள் வந்து பார்த்த போது ஆனந்த் இறந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பவானி சப்இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த ஆனந்த் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் வரப்பாளையம், பாச்சாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கிளீனராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டுவிட்டு பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி ரங்காத்தாள் மற்றும் மகன் சதாசிவம் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறம் தாழ் போட்டு இருந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் விட்டத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை கீழே இறக்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    தந்தை பைக் வாங்கி கொடுக்காததால் பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.

    இவரது மகன் தானேஸ்வரன் (வயது20). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தானேஸ்வரன் தனது தந்தை–யிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டார். ஆனால் அவரது தந்தை பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனால் தானேஸ்வரன் விரக்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தானேஷ்வரன் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து‌ உள்ளே சென்று அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே தலை வலியால் அவதி அடைந்து வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உதயண்டியூர் பூசாரி–பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகரத்தினம் (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனிசாமி புத்தக கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நாகரத்தினம் கடந்த சில நாட்களாகவே தலை வலியால் அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நாகரத்தினம், அவரது கணவர் மகன், மகள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நாகரத்தினம் திடீரென தனக்கு தலை வலிப்பதாக கூறி வீட்டிலுள்ள அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார்.

    இதனால் அவரது கணவர்,மகன், மகள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாகரத்தினம் தூக்குபோட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×