search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits suicide in"

    • யசோதா அறையின் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி எஸ்.கே.சி.நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீ ரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல் பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் வள்ளி (50).இவரது கணவர் செல்வம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பிரபாகரன் (32). கூலிவேலை செய்து வருகிறார். இளைய மகன் ஆனந்த் (29). டிப்ளமோ படித்துள்ள இவர், பி.வி.சி. கதவுகள் பொருந்தும் வேலை செய்துவந்தார்.

    இந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கு மாறு ஆனந்த் தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார்.

    அவரும், மூத்த மகன் பிரபாகரனுக்கு திருமணம் செய்த பின்னர் ஆனந்துக்கு செய்து வைப்பதாக கூறி யுள்ளார். இதனால், ஆனந்த் மன வருத்தத்தில் இருந்து ள்ளார்.

    இந்த நிலையில் வள்ளி, தங்களது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு நேற்று முன் தினம் சென்று விட்டார்.

    அன்று இரவு வீட்டில் வள்ளியின் மகன்கள் பிரபாகரனும், ஆனந்தும் இருந்துள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டி ருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கா ததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது, படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே ஆனந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×