search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "desperation"

    • படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல் பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் வள்ளி (50).இவரது கணவர் செல்வம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பிரபாகரன் (32). கூலிவேலை செய்து வருகிறார். இளைய மகன் ஆனந்த் (29). டிப்ளமோ படித்துள்ள இவர், பி.வி.சி. கதவுகள் பொருந்தும் வேலை செய்துவந்தார்.

    இந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கு மாறு ஆனந்த் தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார்.

    அவரும், மூத்த மகன் பிரபாகரனுக்கு திருமணம் செய்த பின்னர் ஆனந்துக்கு செய்து வைப்பதாக கூறி யுள்ளார். இதனால், ஆனந்த் மன வருத்தத்தில் இருந்து ள்ளார்.

    இந்த நிலையில் வள்ளி, தங்களது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு நேற்று முன் தினம் சென்று விட்டார்.

    அன்று இரவு வீட்டில் வள்ளியின் மகன்கள் பிரபாகரனும், ஆனந்தும் இருந்துள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டி ருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கா ததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது, படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே ஆனந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வில்லியனூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- வளவனூர் மெயின்ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (வயது34). இவர் கடந்த சில ஆண்டுகளாக வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் அசோக்நகரில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள பாலிதீன் கவர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெங்கடேஷ்பாபு வேலை பார்த்து வந்த தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் வெங்கடேஷ்பாபு வேலை இன்றி தவித்து வந்தார். மேலும் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ்பாபு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவர் எலி மருந்தை (வி‌ஷம்) தின்றுவிட்டு வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் வெங்கடேஷ்பாபுவை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேஷ்பாபு பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×