search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hangman"

    • வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீனிவாசன் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (59).திருமணமாகாதவர். இவர் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியவாறு உடலை திருவண்ணாமலை போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை போலீசார் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் சீனிவாசன் எப்படி இறந்தார்?யாரேனும் இவரை கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×