search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி கதர்கடை ஊழியர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூக்கு போட்டு தற்கொலை
    X

    தூக்கு மாட்டி இறந்த சீனிவாசனை படத்தில் காணலாம்.

    பண்ருட்டி கதர்கடை ஊழியர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூக்கு போட்டு தற்கொலை

    • சீனிவாசன் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (59).திருமணமாகாதவர். இவர் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியவாறு உடலை திருவண்ணாமலை போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை போலீசார் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் சீனிவாசன் எப்படி இறந்தார்?யாரேனும் இவரை கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×