search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குபோட்டு முதியவர் தற்கொலை
    X

    தூக்குபோட்டு முதியவர் தற்கொலை

    • சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வி.ஓ.சி வீதி யை சேர்ந்தவர் சின்னசாமி (63). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கட்டிட கூலி தொழிலாளி யான சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கள்ளி ப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவிழா நடந்தது. இந்த விழாவுக்கு சின்னச்சாமி சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அந்த வழியாக வந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து 2 தர ப்பினரும் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை சின்னசாமி தனது மகன் ரவியிடம் போலீஸ் நிலை யத்திற்கு செல்ல வேண்டும் என கூறி வந்ததாக தெரி கிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்தும் அவரது மகன் ரவி வீட்டுக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சின்னசாமி தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

    இதையடுத்து உடனடி யாக அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் சின்ன சாமியை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சின்னசாமி உடல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சின்னசாமி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×