search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணம்"

    சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பாவாடை மனைவி கனகாம்பரம் (வயது 55).இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திருவெண்ணைநல்லூர் மலட்டாற்று பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதைத் தொடர்ந்து அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய் தேடி பார்த்தனர். ஆற்று பகுதியில் பழமையான உரை கிணறு அருகே கனகாம்பரம் வைத்திருந்த வெற்றிலை பாக்கு வைக்கும் சுருக்கு பை, குடை மற்றும் காலனி கிடந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவி னர்கள், அவர் கிணற்றில் விழுந்திருக்காலம் என கறுதி திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடினர். அங்கு அவர் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. கனகாம்பரமும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை மலட்டாறு வா ய்க்காலில் கனகாம்பரத்தின் உடல் பிணமாக மிதந்தது. அதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து அவரது மகனுக்கும் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அப்போது அங்கு திரண்ட கனகாம்பரத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, அதன் அறிக்கை வந்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ப்படுமென கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்த கனகாம்பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கனகாம்பரத்தில் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கனகாம்பரத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போலீசார் அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் தெய்வ சகாயம். இவரது மகன் அந்தோணி ராஜ் (வயது 23). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று அந்தோணி ராஜ் வீட்டில் இருந்தவர் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அந்தோணி ராஜை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே பகுதியில் தரை கிணறு உள்ளது.

    அங்கு சென்று பார்த்த போது தண்ணீரில் மூழ்கி அந்தோணி ராஜ் பிணமாக கிடந்தார். இத்தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ரேஸ்கோர்ஸ் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
    • இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை

    கோவை,

    கோவை வாலாங்குளம் ரெயில்வே குடியிருப்பு பின்புறம் உள்ள கோவை - கேரளா செல்லும் ரெயில்வே தண்டவாளம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

    பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அழுகிய நிலையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் பகுதியில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • பிணத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி கும்பகோணத்தான் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் தூக்கில் தொங்குவதாக பொது மக்கள் ஸ்ரீரங்கம் போலீசா ருக்கு தகவல் அளித்து உள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் தூக்கில் தொங்கிய அந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலையா? அல்லது அவரை யாராவது அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். கும்பகோணத்தான் சாலையில் மரத்தில் வாலிபர் தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற அவர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருச்சியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் கிடந்தது
    • பாசத்தில் உடல் அருகே காத்திருந்து பாதுகாத்த வளர்ப்பு நாய்

    திருச்சி,

    திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் அறை கதவு லேசாக சாத்தப்பட்டு இருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அந்த வீட்டில் வசித்து வந்த மதியழகன் (வயது 50) என்பவர் இறந்து கிடந்தார்.மேலும் அங்கு ஒரு நாய் இருந்து கொண்டு அவரை நெருங்க விடாமல் போலீசை கண்டு குரைத்து கொண்டு இருந்தது. தனது எஜமானர் இறந்த நிலையிலும் அவரை விட்டுப் பிரியாமல் அந்த நாய் கடந்த இரு தினங்களாக அங்கேயே படுத்திருக்கலாம் என கூறப்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக போலீசார் நாயை துரத்தி விட்டு உடலை மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த அவரது சகோதரர் சம்பவ இடம் விரைந்து வந்தார்.

    அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்த மதியழகன் கோவில்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு காலம் தள்ளி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாய் இறந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து வீட்டில் முடங்கிய அவர் உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டை அருகே மர்மமாக இறந்த தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது
    • தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலில் சந்தேகத்தின் பேரில் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்து புதைக்கப்பட்ட மகனின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.

    புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலை சேர்ந்த சங்கிலி முத்து என்பவரின் மகன் அறிவழகன்(வயது 36). கூலித் தொழிலாளரான இவர், கடந்த நவம்பர் 10-ந்தேதி உயிரிழந்தார். உறவினர்கள் முன்னிலை யில் அங்குள்ள மாயா னத்தில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலை யில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அறிவழகனின் தாய் சாந்தி உடையாளிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கொளத்தூர் வருவாய் துறையினர் முன்னிலையில் அறிவழகனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடல் மீண்டும் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அறிவழகனின் மரணம் குறித்த விபரங்கள் தெரிய வரும் என உடையாளிபட்டி போலீசார் தெரிவித்தனர்.

    • சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அவினாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம், லட்சுமி நகரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 30 அடி ஆழம் கொண்டது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால கிணற்றில் நீர்மட்டம் சற்று உயர்ந்து 8 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. உடனே இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில், அவினாசிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி எஸ்.கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்று தெரியவந்தது. சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக காணப்படும் இந்த பெண், எப்படி இறந்தார் என்று தெரியவில்ைல. யாராவது இவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல கோணங்களில் அவினாசிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெயங்கொண்டம் அருகே முந்திரி காட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடலால் பரபரப்பு நிலவியது
    • தீயை அணைத்து பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காட்டில் இருந்து தீ எரிந்து புகை வெளியாவது குறித்து, அந்த பகுதியாக சென்ற பொதுமக்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு வந்து போலீசார், பார்த்த போது மனித உடல் எரிந்து கொண்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே சாக்கு உதவியுடன் உடலின் மீது எந்த தீயை அணைத்து உள்ளனர். இருப்பினும் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கருகிற எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. இறந்தது ஆணா, பெண்ணா, என்பது கூட தெரியவில்லை.

    இதனை அடுத்து உடையார்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைத்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் டிக்சி, மோப்பம் பிடித்தவாறு, வெண்மான் கொண்டான் கிராமம் மில் வரை சென்றது.

    நேற்று காலை வடகடல்- குடிகாடு பிரிவு சாலையில் ரத்தம் அதிக அளவில் கொட்டிகிடந்தது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சாலை மார்க்கமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரமும், வயல்வெளி மார்க்கமாக சுமார் 3 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது.இது குறித்தும் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • காரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    காங்கயம், பங்களாபுதூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 73) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக காங்கயம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர், புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள பொன்பரப்பி என்ற இடத்தில் பி. ஏ. பி., கிளை வாய்க்காலில் மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது.தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வேலாயுதம்பாளையம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த பெண் பிணத்தால் பரபரப்பு ஏற்பட்டது
    • பிணத்தை கைப்பற்றி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றில் தண்ணீரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கரை ஓரமாக ஒதுங்கியது. அதேபோல் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த திட்டில் மிதந்தது. போலீசார் பிணங்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காவிரி ஆற்றில் நடு திட்டில் சிக்கிக்கொண்ட வாலிபர் நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜெகநாதன் ( 32) என்பது தெரியவந்தது. இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும்அவரது உறவினர்கள் 15 பேருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் காவேரி ஆற்று தடுப்பணை குளித்தனர். அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஜெகநாதனை காணவில்லை. இந்நிலையில் ஜெகநாதனின் உடல் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றுப்பகுதியில் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அதேபோல் காவிரி ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் யார், அவர் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? அல்லது தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் இவரை கொலை செய்து காவிரி ஆற்று தண்ணீரில் வீசி சென்று விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சுமார் 35 வது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெணை கடந்த 3 நாட்களாக காணவில்லை. எனவே கொடுமுடி அருகே காணாமல் போன பெண்ணின் பிணமா? என்பது அவரது உறவினர் வந்த பிறகு தெரியவரும். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • அக்ரஹார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன்.
    • ரெயிலில் அடிபட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார்

    திருச்சி 

    திருச்சி அரியமங்கலம் அக்ரஹார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி லதா.

    இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறி திருச்சி மத்திய பஸ் நிலையம் சென்றார். பின்னர் தனது மகன் ஸ்ருதீசிடம் கேரளா புறப்பட்டு செல்வதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    ஆனால் அவர் கேரளாவுக்கும் செல்லவில்லை வீட்டுக்கும் திரும்ப வரவில்லை இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளோடு தண்டவாள பகுதியில் ரெயிலில் அடிபட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓடும் ரெயிலில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மாயமான மூதாட்டி ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×