search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றில்"

    • காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்றுவது? பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்று வது? காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது? வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால், அவர்களை எப்படி காப்பாற் றுவது ? மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது? உள்ளிட்ட பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பிளாஸ்டிக் போட்டை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்ற வற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை நெகமம் கெஞ்சனூர் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்து கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ. ராஜசேகரன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், இறந்த நபர் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை, சிமெண்ட் நிற அரைக்கால் டிராயர் அணிந்துள்ளார்.

    ஆனால், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கினார்.

    கன்னியாகுமாரி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதபள்ளி மடத்துவிளையைச் சேர்ந்த வர் தங்கமணி. இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பபாய் (60).

    இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், உள்ளனர். இரண்டு பெண் களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் புஷ்ப பாய் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். துணியை துவைத்து கரையில் வைத்து விட்டு ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இழுத் துச்சென்று நீரில் மூழ்கி யுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் திருவட்டார் போலீசுக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து புஷ்பபாயை மாலை 6 மணி வரை தேடினார்கள். பின்னர் இருட்டி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

    இந்நிலையில் மலை யோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பா றை அணையிலிருந்து தொடர்ந்து 800 கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டி ருப்பதையடுத்து மாயமான புஷ்பபாயை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாக காலையில் இருந்தே புஷ்பபாயை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறுகட்டி அந்த பகுதி முழுவதும் தேடி வருகிறார்கள்.

    • 6-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.
    • திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 6-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்கள் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது அணைக்கரையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரித்து வருவதால் நேற்று மாலையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான மேலவாடி, பாலுரான் படுகை, கொன்னக்காட்டு படுகை, நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து வருவதால் அரசு முகாமிற்கு செல்லும் நிலையில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

    கடல் சீற்றம் காரணமாக கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
    • ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி கதவணை 2-வது மதகில் சிக்கி கிடந்த இளைஞர் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முப்பாட்டாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் லட்சுமி நாராயணன். இவரது மகன் பரசுராமன்( வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் தேடி வந்து பார்த்தபோது நேற்று சோழசிராமணி கதவணையில் இரண்டாவது மதகில் பரசுராமன் இறந்த நிலையில் பிணமாக மிதநதார்.

    இது குறித்து ஜேடர்பா ளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமனின் உடலை மீட்டு பிரேத சோத னைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடகில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையை பாதிக்க ப்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் வயதானவர்களுக்கு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினார்.

    அப்போது கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், நகர செயலாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், நிர்வாகிகள் சிவ.மனோகரன், நாகரத்தினம், சொக்கலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளி யேற்றப்படுகிறது.
    • நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக , மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளி யேற்றப்படுகிறது.

    இதனால் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, ஜமீன் எளம்பள்ளி,குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், வடகரையாத்தூர், ஆனங்கூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல் பாளை யம், கொந்தளம் ஆகிய ஊராட்சி மற்றும் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் ஆகிய பேரூராட்சி பகுதி காவிரி கரையோர பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் மீன் பிடிப்பதற்கும் காவிரி ஆற்றை கடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகை கள் அமைத்தும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது .

    இந்நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரண மாக காவிரி கரையோரம் உள்ள விவசாய நிலங்க ளில் உள்ள கரும்பு, வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு,நெல் , சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் வெள்ள நீர் வயல்வெளிகளில் புகுந்துள்ளது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவேரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பரமத்தி வேலூரில் நாமக்கல் -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இருசக்கரகங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை பாலத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கை பார்த்து செல்பி எடுக்கின்ற னர்.

    அவர்கள் பாலத்தின் நெடுகிலும் கார்கள், இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூ றாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இதன் காரணமாக சேலத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் கரூர், கொடுமுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகளும் நிறுத்தப்படும் கார்களை அப்புறப்படுத்தி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.
    • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுபவது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.

    இதனையொட்டி மகுடேசுவரர், வடிவுடையநாயகி அம்பாள், வீர நாராரயணப் பெருமாள், ஶ்ரீ தேவி-பூதேவி, உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து வீதி உலா வர முன்பாக சிவன் தீபத்தை கோவில் முதன்மை சிவாச்சாரியார் பாபுசுவாமிகள், பிரபு சுவாமிகள் எடுத்து வந்தனர்.

    பெருமாள் தீபத்தை கோவில் முதன்மை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் முன்னிலையில் ராஜா சுவாமிகள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்தார். ஆற்றங்கரை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு பொது மக்கள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.

    புதிய படித்துறை, பழைய படித்துறை இரண்டுக்கும் இடையில் உள்ள கொம்பனை என்ற இடத்தில் முதலாவதாக சிவன் தீபத்தை பாபு சிவாச்சாரியார் பக்தர்களின் கரகோசத்துக்கிடையே ஆற்றில் விட்டார். அதனை தொடர்ந்து ராஜா பட்டாச்சாரியார் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோசத்துக் கிடையே பெருமாள் தீபத்தை ஆற்றில் விட்டார். தீபம் ஆற்றில் மிதந்து செல்வதை பக்தர்களும், பொதுமக்களும் தொலைவில் நின்று வணங்கி வழிபட்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • மேட்டூா் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அணையில் இருந்து கூடுதலாக காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் சுயபடம் எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் நீராடுதல் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொது–மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    அவசர உதவிக்கு 1077, காவல் துறை 100, தீயணைப்புத் துறை 101, மருத்துவ உதவி 104, ஆம்புலன்ஸ் 108 என்ற எண்களிலும், குமார–பாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், மோகனூா் வட்டாட்சியா்களையும் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.
    • இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாகிறது இதனை சரிசெய்ய பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள்கோரிக்கை. விடுத்துள்ளனர்

    வேதாரண்டம் அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு ,தகட்டூர் , மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.

    இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும்,தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜ வாய்க்காலில் குளிக்கும்போது காவிரி ஆற்றில் மூழ்கி பலியான கல்லூரி மாணவன் உடல் மீட்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூர் சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

    சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தார்.

    திடீரென ஸ்ரீதர் மட்டும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் ஸ்ரீதரை தேடியனர்.

    நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ‌‌ ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீ தர்‌ உடலை ராஜா வாய்க்காலின் படித்துறைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×