தண்ணீரில் மூழ்கி மாயமான பெண்ணை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கினார்.
புஷ்பபாய்.
புஷ்பபாய்.
Published on

கன்னியாகுமாரி:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதபள்ளி மடத்துவிளையைச் சேர்ந்த வர் தங்கமணி. இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பபாய் (60).

இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், உள்ளனர். இரண்டு பெண் களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மதியம் புஷ்ப பாய் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். துணியை துவைத்து கரையில் வைத்து விட்டு ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இழுத் துச்சென்று நீரில் மூழ்கி யுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் திருவட்டார் போலீசுக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து புஷ்பபாயை மாலை 6 மணி வரை தேடினார்கள். பின்னர் இருட்டி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

இந்நிலையில் மலை யோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பா றை அணையிலிருந்து தொடர்ந்து 800 கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டி ருப்பதையடுத்து மாயமான புஷ்பபாயை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று 2-வது நாளாக காலையில் இருந்தே புஷ்பபாயை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறுகட்டி அந்த பகுதி முழுவதும் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com