search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehearsing"

    • காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்றுவது? பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்று வது? காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது? வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால், அவர்களை எப்படி காப்பாற் றுவது ? மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது? உள்ளிட்ட பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பிளாஸ்டிக் போட்டை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்ற வற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    ×