என் மலர்
நீங்கள் தேடியது "#கொலை"
- வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
- இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.
தென்காசி:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.
- கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார்.
- மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், ராமதுருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது30). இவரது சகோதரர் வெங்கடேஷ் ( 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத தவணையில் 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். தொழில் சரியாக நடக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பங்கு சந்தையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தார். பங்கு சந்தையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவித்து வந்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தி வந்தார்.
இதன் மூலம் நரேஷுக்கு ரூ.1.50 கோடி கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு நரேஷுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சகோதரர் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ. 4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.
ராகேஷ் என்பவர் நரேஷ் தனக்கு தரவேண்டிய ரூ. 7 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
ராகேஷை அணுகிய நரேஷ் தனது சகோதரரை கொலை செய்ய ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் மேலும் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதேபோல் தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.
கடந்த 29-ந்தேதி லாரி டிரைவர் பிரதீப், நரேஷ்க்கு போன் செய்து லாரி புறநகரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நரேஷ் தனது சகோதரர் வெங்கடேஷை பைக்கில் லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் வெங்கடேஷை லாரி சக்கரத்திற்கு அடியில் படுக்க வைத்து லாரியை முன்னோக்கி இயக்கினர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நேற்று நரேஷிடம் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.
அப்போது நரேஷ் விபத்து குறித்து கூறிய விதம் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நரேஷை பிடித்து விசாரணை செய்தபோது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், ராகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை.
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்தார்.
- சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபீன் கார்க்.
கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அப்போது பேசிய அசாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக ஒரு கொலை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சுபின் கார்க் மரணத்தில் சந்தேகம் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு முனிராஜ் என்பர் காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாக இணையத்தில் பரவிய செய்தி வதந்தி என்று தமிழ்நாடு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இராமேஸ்வரத்தில் இன்று (19.11.2025 பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. கைதான நபரும் கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. வெறுப்புப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருமகளுடன் மாமனாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- மகனுக்கு தெரியவந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை, மகன் தட்டிக்கேட்டதால் மண்வெட்டியால் தாக்கி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள நங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் சவுரப் (வயது 30). சவுரப் மனைவிக்கும், சுபாஷுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இருவரும் தனியாக இருப்பதை சவுரப் பார்த்துவிட்டார்.
இது தொடர்பாக தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தனது மகளை தீர்த்துக்கட்ட சுபாஷ் முடிவு செய்துள்ளார். சவுரப் கடந்த 12-ந்தேதி வயல்வெளிக்கு சென்றபோது, பின்னால் சென்ற சுபாஷ் மண்வெட்டியால் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாது போன்று வீட்டிற்கு வந்துள்ளார்.
மகனை அங்கும் இங்குமாக தேடுவது போன்று தேடியுள்ளார். பின்னர் 14-ந்தேதி போலீசில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அனறைய தினமே, வயல்வெளியில் தனது மகன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, காட்டு விலங்கு அடித்து கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி உடல்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில் உடல் மீது ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுபாஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்நது போலீசார் அவரை கைது செய்தனர்.
- மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
- நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்து ரகளையில் ஈடுபடுவதுடன் சில பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம்.
அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் மன்மதன். பன்றி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி. இவர்களது மகன் ஸ்ரீதர் (வயது 31). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி குடும்ப தகராறில் ஏற்கனவே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள படுக்கையில் ஸ்ரீதர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை. தாய் கல்யாணி செங்குன்றம் அருகே உள்ள அவரது மகள் வீட்டிலும், தந்தை மன்மதன் இறைச்சி வியாபாரத்திலும் இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மன்மதனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் மகன் ஸ்ரீதரை கழுத்தை அறுத்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்கு மன்மதனின் மனைவி கல்யாணியும் உடந்தையாக இருந்தது தெரிந்தது.
இதையடுத்து மன்மதன், அவரது மனைவி கல்யாணி ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் ஜமிஸ் பாபு மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கொலையுண்ட ஸ்ரீதர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார்.
மேலும் நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்து ரகளையில் ஈடுபடுவதுடன் சில பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தபோது அடிக்கடி அடித்து உதைத்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் தனது பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் மகன் என்றும் பாராமல் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிந்தது.
சம்பவம் நடந்தபோது தாய் கல்யாணி வீட்டின் வெளியே நின்றதாக தெரிகிறது. பின்னர் மகன் உடலை வீட்டிலேயே வைத்து கதவை பூட்டிவிட்டு மன்மதன் தனது மனைவி கல்யாணியை செங்குன்றத்தில் உள்ள மகள் வீட்டில் விட்டுவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்தார். அன்று இரவு மன்மதன் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகே உள்ள இறைச்சி கடையில் தங்கி விட்டு மறுநாள் காலையில் வழக்கம் போல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
போலீசார் சந்தே கத்தின்பேரில் மன்மதனை பிடித்து விசாரித்த போதுதான் அவர் மகனை கழுத்தை அறுத்து கொன்றது தெரிந்தது. மேலும் மகன் கொலை குறித்து கல்யாணியும் வெளியில் சொல்லாமல் இருந்தார். இதனால் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
- அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார்.
- இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரெயில் ஏசி கோச்சில் போர்வை கேட்டதற்கு ராணுவ வீரரை கோச் உதவியாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராணுவ வீரர் ஜிகர் சவுத்ரி விடுப்பில் வீடு செல்வதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி, ஜம்மு தாவி-சபர்மதி எக்ஸ்பிரஸின் 2nd ஏசி கோச்சில் சொந்தமாநிலமான குஜராத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
பயணத்தின் நடுவில், அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார். படுக்கை விரிப்பு கொடுத்த சுபைர், போர்வை கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுபைர், தன்னிடம் இருந்த கத்தியால் ஜிகர் சவுத்ரியைத் சரமாரியாக குத்தினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிக்கெட் பரிசோதகரின் புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பிகானர் ரெயில் நிலையத்தில் வைத்து கோச் உதவியாளர் சுபைரை கைது செய்தனர். சுபைர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றிய பற்றிய புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரெயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
- கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்ததால் கொலை செய்ய திட்டம்.
- 3 பேர் உதவியுடன் கொலை செய்து சமையலறையில் உடல் புதைப்பு.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் பகுதியில் கட்டுமான தொழில் (கொத்தனார்) வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் ரூபி என்ற பெண்ணிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ரூபிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வகேலா என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அன்சாரிக்கு தெரியவந்து, மனைவியை அடித்து உதைத்துள்ளார். இனிமேல் கணவன் உயிரோடு இருந்தால், வதேலாவுடனான கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த ரூபி, கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இது தொடர்பாக கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். கள்ளக்காதலன் வகேலா, அவரது உறவினர்கள் ரஹீம் மற்றும் மோசின் ஆகிய மேலும் இரண்டு பேரை இவர்களது திட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.
அன்சாரி வீட்டிற்குள் சென்ற 3 பேரும், ரூபி உதவியுடன் அன்சாரியின் கழுத்தை அறுத்து தீர்த்துக்கட்டினர். பின்னர் உடலை சமையலறையில் குழி தோண்டு புதைத்துள்ளனர். அத்துடன், டைல்ஸ் ஒட்டி குழி தோண்டிய அடையாளம் இல்லாத வகையில் மறைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வருடம் ஆகிறது. ரூபி அந்த வீட்டில் பல மாதங்கள் தங்கியுள்ளார். பின்னர், வேறு வீட்டிற்கு மாறியுள்ளார். வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சந்தேகம் வந்துள்ளார். இந்த வீட்டில் வசித்து வந்த அன்சாரி என்பவரை பல மாதங்களாக பார்க்கவில்லை என போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தும்போது, வதேலா வசமாக சிக்கிக் கொண்டார். வதேலாவின் வாக்குமூலம் அடிப்படையில் ரூபி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய விவரம் தெரியவந்தது. வீட்டை உடைத்து சமையலறையில் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை எடுத்துள்ளனர். அதை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் அவர்களை நெருங்குவதை அறிந்து கொண்ட ரூபி, ரஹிம், மோசின் தலைமறைவாகியுள்ளனர்.
- ராம்கேஷ் மீனாவுடன் அவரது காதலி அம்ரிதா சவுகான் லிவ்-இன் பார்ட்னராக வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
வடக்கு டெல்லி திமார்பூர் பகுதியை சேர்ந்தவர் ராம்கேஷ் மீனா (வயது32). இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த 6-ந்தேதி அடுக்குமாடி குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் ராம்கேஷ் மீனா இறந்து கிடந்தார். அவரது பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
அங்குள்ள அறையில் சோதனை செய்த போது அவரது ஹார்ட்டிஸ்க்கில் 15 பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ராம்கேஷ்மீனா தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் ஒருவர் அங்கு வந்து சென்றதற்கான முக்கிய தடயம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. ராம்கேஷ் மீனாவுடன் அவரது காதலி அம்ரிதா சவுகான் லிவ்-இன் பார்ட்னராக வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் அவரது நண்பர் சந்தீப்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம்கேஷ்மீனாவை கொன்று விபத்து போல் காட்ட தீவைத்ததாக கூறினார்.
மேலும் ராம்கேஷ்மீனா வைத்திருந்த ஹார்ட்டிஸ்க்கில் அம்ரிதா சவுகானின் நிர்வாண படங்களும் மேலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்தது.
அம்ரிதா சவுகான் அவளது படங்களை அழிக்க வற்புறுத்தியும் ராம்கேஷ் மீனா அழிக்காததால் அவனை கொன்றதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ராம்கேஷ்மீனா பெண்களின் நிர்வாண படங்களை ஹார்ட்டிஸ்க்கில் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்துள்ளார். இதுவே கொலைக்கு காரணமாக இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ரகசிய வீடியோக்களை அழிக்காததால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
- முன்னாள் காதலர், மேலும் ஒருவரை சேர்த்துக் கொண்டு, எரித்து கொலை செய்துள்ளார்.
டெல்லி திமர்பூரில் உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வந்த 32 வயதான நபர், தனது பிளாட்டில் கடந்த 6ஆம் தேதி தீயில் கருகியபடி இறந்த கிடந்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட உடல் ராம் கேஷ் மீனா என்பவர் எனத் தெரியவந்தது. ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால் ராம் கேஷ் மீனாவின் பெற்றோர், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, ராம் கேஷ் மீனாவுடன் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்த 21 வயது இளம் பெண்தான், அவரை தீர்த்துக்கட்டி, தீ விபத்தில் உயிரிழந்தது போன்று நாடகமாட முடிவு செய்தது தெரியவந்தது.
ராம் கேஷ் மீனாவை அந்த பெண் கடந்த வருடம் சந்தித்துள்ளார். சந்தித்த உடனே இருவரும் தொடர்பை நீடிக்க தொடங்கினர். அதன்பிறகு இருவரும் லிவ்-இன் பார்ட்னராக வாழத் தொடங்கினர். அப்போது ராம் கேஷ், அந்த இளம் பெண்ணை மோசமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. மேலும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் அதை சேமித்து வைத்துள்ளார். இதை அறிந்த அந்த பெண், அந்த வீடியோக்களை அழிக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், லிவ்-இன் பார்ட்னர் அதை அழிக்க மறுத்துவிட்டார்.
இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பழைய காதலனிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இருவரும் மற்றொருவரை துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.
மூன்று பேரும் ராம் கேஷ் மீனா தங்கியிருந்த பிளாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கொலை செய்து, ரூமிற்கு தீ வைத்துள்ளனர். பின்னர் ஏதும் தெரியாதது போல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
அந்த கட்டிடத்திற்கு முதலில் இருவர் வெளியில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், ஒருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் இருவர் வெளியேறியுள்ளனர். சிசிடிவி-யில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த பெண் தனது போனை ஸ்விட்-ஆஃப் செய்துவிட்டார். பின்னர் தீவிர தேடுதலுக்குக்குப் பிறகு போலீசார் கடந்த 18ஆம் தேதி அவரை பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






