என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#கொலை"

    • சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். நெசவு தொழிலாளி. இவரது மகள் ரிஷிகா பிரியா (வயது 7). பெற்றோர்கள் இருவரும் தனித்தனியாக வேலைக்குச் சென்று தங்களது 2 குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரஷிகா பிரியா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று இருந்தனர்.

    சிறுமியின் எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் குல்வர்தன் (30). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை குல்வர்தன் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்தார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை அடைத்து வைத்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கணவன், மனைவி இருவரும் பதறி அடித்து கொண்டு வந்து அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மதனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.

    நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் குல்வர்தன் வீட்டின் கதவை தட்டினர். மது போதையில் இருந்த குல்வர்தன் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது குல்வர்தன் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குல்வர்தன் ரிஷிகா பிரியாவை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    மீண்டும் குல்வர்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குல்வர்தன் போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரிஷிகா பிரியாவின் உடலில் ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

    போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியின் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    குல்வர்தனை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குல்வர்தனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • இளம்பெண் கணவரை பிரிந்து விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தி அடுத்த ரகுபதி பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை திம்மாஜிபேட்டியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு அவரது மருமகன் மதுபோதைக்கு அடிமையாகி அவரது மகளை துன்புறுத்தி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இளம்பெண் கணவரை பிரிந்து விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு மாமியார் தான் காரணம் என வாலிபர் எண்ணினார். நேற்று முன்தினம் இரவு மாமியார் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகன் அவரை வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

    நேற்று காலை ரத்த வெள்ளத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இறந்து போனவரின் 2-வது மகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கல்வகுர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடிப் பார்க்கின்றனர்.

    • பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி காதலித்துள்ளனர்.
    • பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அவரை ப்ளாக் செய்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது செல்போன் நம்பரை பிளாக் செய்ததற்காக காதலன் பிரசாத்தை (25) காதலி ரோஷினி (22) கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை ப்ளாக் செய்துள்ளார்.

    தன்னை பிளாக் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரோஷினியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.

    முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.

    கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

    பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பீகார் வாலிபரின் மனைவி உடல் கிடைத்ததை தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் துப்பு துலக்கி கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    3 பேர் கொலை வழக்கில் வீடியோ பதிவு காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்று மேலும் பல தகவல்களை சேகரித்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகர போலீசார் இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்றார்.

    • தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார்.
    • மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் பீகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு மது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற வாக்கியம் ஏட்டளவில்தான் என்பதற்கு சான்றுதான் பிகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை. இக்கொலைக்கு அடிப்படைக்காரணம் மது.

    ஒரு பெண், ஒரு குழந்தை இவர்களில் யாரையாவது கொல்ல வேண்டும் அல்லது அருகே உள்ள மதுவை அருந்தவேண்டும் என்ற கதைக்கேற்ப மதுவை அருந்திவிட்டு பெண்ணை அடைய தடையாக இருந்த குழந்தையை கொன்று பின் அப்பெண்ணையும் கொன்றதாக அக்கதை முடியும். ஆக மது அனைத்தையும் செய்யவைக்கும் என்பதே இக்கதையின் சாராம்சம்.

    அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கியதால்தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார். அப்படி சொன்ன மறுநாளே தமிழகத்தையே உலுக்கிய கொடூர கொலை. வேலை கேட்டு நம்பி வந்த குடும்பத்தை நம்பிக்கை துரோகம் செய்து மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ஆனால் பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத்தவரையும் விட்டுவைக்காத மது போதை ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியுள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ இனியாவது மதுவை அறவே ஒழிக்க அரசு மதுகடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். இலவசங்களை அளிக்க மது வருவாயை தவிர்த்து வேறுவகையில் வருவாயை பெற பல வழிகள் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார்.
    • இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்த தண்டாவை சேர்ந்தவர் ராமாவத் ரவி (வயது 34). இவர் சல்குனூரில் உள்ள அரசு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    லட்சுமிக்கு அவரது கணவரின் சகோதரி மகன் கணேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என லட்சுமியை பலமுறை கண்டித்தனர்.

    இருப்பினும் லட்சுமியின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக லட்சுமி தனது மருமகன் கணேஷ் உடன் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

    இது சம்பந்தமாக கடந்த 26-ந்தேதி காலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவி வேலைக்கு சென்று விட்டார். லட்சுமி மிரியாலகுடாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் லட்சுமி கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கவனித்த ரவியின் தந்தை லட்சுமண நாயக் இது வழக்கமாக ஏற்படும் தகராறு என தூங்கிவிட்டார்.

    லட்சுமி நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர்.

    காலையில் ரவியின் தந்தை லட்சுமண நாயக் எழுந்து பார்த்தபோது மகன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து லட்சுமண நாயக் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லட்சுமி தனது மருமகன் கணேஷுடன் மிரியாலகுடா போலீசில் சரணடைந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
    • இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்

    ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.

    பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.

    சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.

    பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.

    தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.

    நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். 

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் 15 நாளில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஷரியத்பூர் மாவட்டத்தில் மேலும் ஒரு இந்து ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் 50 வயதான கோகோன் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்திய ஒரு குழு அவரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

    கடந்த 15 நாளில் வங்கதேசத்தில் இந்துக்கள்மீது நடத்தப்பட்ட 4-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
    • ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார்.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

    இந்தநிலையில் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் உமர் ஹாடி குற்றம்சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது சகோதரர் கொலைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களே காரணம். அவரை கொன்றுவிட்டு அதை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்ய விரும்புகிறீர்கள். பொதுத் தேர்தலை சீர்குலைப்பதற்காகவே அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்தக் கொலை நடத்தப்பட்டது.

    தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகள் மீது விரைவாக விசாரணை நடத்தப்படு வதை உறுதி செய்யுங்கள். ஆனால் அரசாங்கம் எந்த வெளிப்படையான முன்னேற்றத்தையும் செய்யவில்லை. ஷெரீப் உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்காளதேசத்தில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.
    • குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆணவக் கொலை!

    சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்று பலரால் வலியுறுத்தப்படுகிறது. அது எப்போ வலியுறுத்தப்படுகிறது என்று கேட்டால் ஒரு ஆணவக் கொலை நடைபெற்ற பின்னர்.. அதன்பின் தனிச்சட்டம் குறித்த எந்த வலியுறுத்தலும் இல்லை.

    இது இன்றைக்கோ, நேற்றைக்கோ கிடையாது. பல ஆண்டுகளாக தொடரும் அவலம். ஆணவக் கொலையால் ஒரு உயிர் பறிக்கப்பட்ட பிறகே பலரும் இதுகுறித்து பேசுகிறார்கள்... ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

    தமிழ்நாட்டில் 2017 முதல் 2025 வரை சுமார் 65 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஆணவ கொலை என்றதும் தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என பல பேரை சொல்லும் இந்த பட்டியலில் தற்போது கவின் கொலை வழக்கும் நினைவு கூறப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்..

     

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கவின் தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அந்த மருத்துவமனையில்தான் கவின் காதலித்த பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு வந்த அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேசுவதாகக் கூறி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, சுர்ஜித் அரிவாளால் கவினைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொலை நடந்த உடனேயே சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலையில் அப்பெண்ணின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

     

    எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபாலன் ஆகியோரும் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே, கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போதைய நிலை இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    அந்த கோரிக்கை அடுத்த ஆண்டாவது நிறைவேறுமா? என்பது பல ஆயிரம் கேள்விகளை உண்டாக்கியுள்ளது. காலம் தான் பதில் சொல்லும். 

    • வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.

    • கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார்.
    • மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், ராமதுருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது30). இவரது சகோதரர் வெங்கடேஷ் ( 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத தவணையில் 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். தொழில் சரியாக நடக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பங்கு சந்தையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தார். பங்கு சந்தையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவித்து வந்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தி வந்தார்.

    இதன் மூலம் நரேஷுக்கு ரூ.1.50 கோடி கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு நரேஷுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

    கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சகோதரர் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ. 4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.

    ராகேஷ் என்பவர் நரேஷ் தனக்கு தரவேண்டிய ரூ. 7 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

    ராகேஷை அணுகிய நரேஷ் தனது சகோதரரை கொலை செய்ய ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் மேலும் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதேபோல் தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.

    கடந்த 29-ந்தேதி லாரி டிரைவர் பிரதீப், நரேஷ்க்கு போன் செய்து லாரி புறநகரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நரேஷ் தனது சகோதரர் வெங்கடேஷை பைக்கில் லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் வெங்கடேஷை லாரி சக்கரத்திற்கு அடியில் படுக்க வைத்து லாரியை முன்னோக்கி இயக்கினர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நேற்று நரேஷிடம் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.

    அப்போது நரேஷ் விபத்து குறித்து கூறிய விதம் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நரேஷை பிடித்து விசாரணை செய்தபோது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், ராகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×