search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர்"

    • மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது.
    • கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பூலாம்பட்டி செல்லும் மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனால் மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நடந்து சென்ற மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    காவிரி கரையோர பகுதிகளில் ரசாயன கழிவுகள் கொட்டுவதால் இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கன்.மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன்.தாரமங்கலம் நகராட்சி ஆணையாளர் சேம் கிங்ஸ்டன். பொறியாளர் பிரேமா.மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா.நகராட்சி பொறியாளர் ஹரிகரன். குமாரபாளையம் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன். எடப்பாடி நகராட்சி பொறியாளர் முருகேசன். ராசிபுரம் பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    • சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.
    • ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி (27). இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து போனது. இந்த சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூங்காவை சீரமைக்க உத்தரவு
    • பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தெரு இறுதியில் உள்ள வீட்டின் முன்பக்கம் நீர் உறிஞ்சி குழி அமைக்கவும், கழிவு நீரோடை மற்றும் கல்வெட்டு அமைக்கவும், பூங்காவிலுள்ள தண்ணீர் தொட்டியை பில்லர் போட்டு வைக்கவும் உத்தரவிட்டார். அந்த பகுதியில் உள்ள பூங்காவில் மின்விளக்குகள்அமைக்கவும், பூங்கா காம்பவுண்ட் ஓரம் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம் அமைக்கவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முறையாக நீர் உறிஞ்சி குழி அமைத்து பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் ராணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூ.9 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.27 லட்சம் செலவில் குளத்தூர் காலனி பகுதியில் அலங்கார தரை கற்கள், பரசுராமன் தெருவில் தார்சாலை அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் ஒடை அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
    • நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் வசித்து வருபவர் முத்துப் பாண்டி (வயது 51).

    இவர் மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது மனைவி செல்வ குமாரி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
    • உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.

    இந்த வாகன சோதனை யில் பள்ளி குழந்தைகளை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    உரிய அனுமதியின்றி 13 பள்ளி குழந்தைகளை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற தனியார் ஆம்னி வேன், பறிமுதல் செய்யப் பட்டு பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் தார்பாய் போடாமல் சென்ற 2 மணல் லாரிகளுக்கு தணிக்கை சீட்டு வழங்கி, தார்ப்பாய் போட்டபின் பயணத்தை தொடர அனுமதிக்கப் பட்டது. அனுமதியின்றி ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மேக்சி கேப் ஆகியவற்றுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

    இந்த வாகன சோதனை பரமத்திவேலூர் வட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். 

    • கருப்புசாமி(வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்கு வாரியில் வேலை செய்து வருகிறார்.
    • அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தீப்பிடித்து வீட்டின் மேற்கூரையில் பற்றி எரிந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செங்கரப் பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்கு வாரியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கெங்காரப் பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று மீன்களை பிடித்து வந்துள்ளார். பின்னர் ஏரியில் பிடித்து வந்த மீன்களை பொறிக்க வேண்டி அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை ஊற்றி வைத்துவிட்டு மறந்து வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

    அப்பொழுது அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தீப்பிடித்து வீட்டின் மேற்கூரையில் பற்றி எரிந்தது.இது குறித்து அங்கிருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்துள் ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக எழுந்து கொண் டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் மற்றும் பொருட்கள் சேதமடையாமல் தடுக்கப்பட்டது.சம்பவம் குறித்து வேலகவுண் டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.
    • ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம்.
    • இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரையில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து இந்த பகுதியில் கொட்டி வைத்து பிளாஸ்டிக் குப்பை, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்து செல்கிறார்கள்.

    தினமும் தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் வேறு கடைகள் எதுவும் இல்லை. இதனால் குப்பைகள் மட்டும் ஒரு பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் இருந்து திடீரென தீ மளமளவென எரிந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ் ஆகி யோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது குறித்து குலசேகரம் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கன்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே லாரி டிரைவர் உடல் நலம் சரியில்லாத காணத்தால் திடிரென மயங்கி விழந்தார். . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என். பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (49). ஆப்பக்கூ டலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி.

    கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 3 மாதத்திலேயே ஜெயகுமார் மனைவியை விட்டு பிரிந்து வசித்து வருகிறார். மேலும் ஜெயக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையம், திருவள்ளுவர் வீதியில் உள்ள ஒரு வேப்பமரத்தடியில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் ஜெயகுமார் சரிவர சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழையால் சாலையோர கடைக்காரர்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 6 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து கனமழை பெய்தது.

    கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

    மழையின் காரணமாக சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டிபன் கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் திடீர் ஆய்வு செய்தார்.

    சங்ககிரி:

    சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது போலீசாருக்கு முறையாக விடுப்புகள் கொடுக்கப்படுகிறதா என்றும், அவர்களுக்கு குறைகள் ஏதாவது உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மேலும் பணி மாறுதல் வேண்டும் என்று கேட்ட போலீசார்களுக்கு உடனடியாக மனு வாங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதனையடுத்து அவர், வழக்குகளை கம்ப்யூட்டரில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மக்களை காவல் நிலையத்திற்கு வெளியே நிற்க வைக்காமல் உடனடியாக அழைத்து அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும், கந்து வட்டி சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களி டம் முறையாக புகார் வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதனையடுத்து அவர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள போலீசார் குடியி ருப்புகளை பார்வையிட்டு, போலீஸ் நிலையத்தை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார்.

    ஆய்வின்போது சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ் பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    ×