search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் மரம் அறுப்பு மில்லில் திடீர் தீ
    X

    பரமத்தி வேலூர் மரம் அறுப்பு மில்லில் திடீர் தீ

    • கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்( வயது 50). இவர் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பி னும் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.

    இது குறித்து சாமிநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மரம் அறுப்பு மில்லுக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரம் அறுப்பு மில்லில் இருந்து அறுப்பு மிஷின் மற்றும் பல்வேறு மரக்கட்டைகள் தீயில் எறிந்து நாசமாயின.

    Next Story
    ×